அண்ணா... அது...ஆ...ஆ... க்ஸிடென்ட் இல்...லை உண்... மையிலேயே ம.... மர்டர் தான் என்று திக்கி தெனறி இருக்கி பிடித்த கழுத்தை சரி செய்தபடியே சந்திரன் சொல்ல
அவன் அருகில் விரைந்து வந்து மண்டியிட்டவன் நீ சொல்றது உண்மையா சொல்லு.... சொல்லு.... என்று திரும்ப திரும்ப கேட்க
அன்னைக்கு மார்னிங்கே பைபாஸ் ல ஏதோ ஆக்ஸிடென்ட் ஆகியிருக்குனு போன் வந்தது
அங்கே போய் பார்க்கிற வரைக்கும் அது உங்க அப்பாவோடதுனோ இல்லை விஷ்னுவோடதுனோ நான் நினைக்கல ஏன் என்றால் அன்னைக்கு முதல் நாள் காலையில தான் என்னை மீட் பண்ணுனும் முக்கியமான விசயமா பேசனும் என்று சொன்னான்
என்ன விசயம் விஷ்னு சொல்லுன்னு சொன்னேன்
அதுக்கு அவன் இல்லைடா கான்பிடன்ஷியலான மேட்டர் நான் நேர்ல வந்து சொல்றேனு சொன்னான் என்றதும்....
என்ன முக்கியமான விசயம், எதை பற்றி, யாரை பற்றி.... சொல்லு அதை என்று சிம்ம கர்ஜனையுடன் கேட்க
எனக்கு தெரியாது? "அவன் வர்ரேனு சொல்லிட்டு வரல.... நானும் அவனுக்கு வெயிட் பன்னி பார்த்து விட்டு நாம நாளைக்கு கேட்டுக்கலாம் என்று விட்டுவிட்டேன்.....
ஆனால் அவனை இப்படி பார்ப்பேன் என்று நான் நினைக்கல அண்ணா சொல்லிவிட்டு அழுதவனை தேற்ற கூட முடியாத நிலமையில் சிவா இருக்க....
அது விஷ்னுவோட உடம்பு என்று தெரிந்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி அப்புறமா பக்கத்துல இருக்கிற உடம்பு யாருனு பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா அது நம்ம சாரோட உடம்புனு தெரிஞ்சதும் ஏற்கனவே ஆம்புலன்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிருந்ததால உடனே ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்து விட்டோம் என்றவன் பாதியில் நிறுத்தி விட்டு சிவாவை பார்க்க
பிறகு என்ன நடந்தது..... கண்களை மூடியபடியே கோபமாய் கேட்க
நான்..... நான்...
என்னடா நான்... நான் என்று சொல்லிட்டு இருக்க... முழுசா சொல்ல வந்ததை சொல்லிடு கோபக்குரலில் சிவா சொல்ல
KAMU SEDANG MEMBACA
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
Fiksi Umumவிதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....