முள்ளும் மலரும் 4

8.7K 253 68
                                    

" நிலா மரியாதையா எழுந்துவா " என்று நிலாவை மிரட்டிவிட்டு  " என்னடா நான் ஒன்னும் உன்னோட மேகா இல்ல. நீ கேட்டவுடனே எல்லாத்தையும் சொல்றதுக்கு.. உன்னால வெறும் பணத்தை வெச்சிட்டு என்னோட வேலைய மட்டும் தான பறிக்க முடியும்.. என் உழைப்பையில்ல.. இப்ப என்ன பிரச்சனை பண்ண இங்க வந்திருக்க " என்று எரிந்து விழுந்தவள்,
அவனது அருகே அமர்ந்திருந்த
நிலாவினைத் தன்புறம் இழுத்து " உன் நிழல்கூட இவங்க மேல படவிட மாட்டேன்.. மரியாதையா வெளிய போ " என்று கோபமாக கூறினாள்.

" என்ன லூசு மாறி பேசற.. நீ செய்யறது பெரிய கலெக்டர் வேலை.. அதை நான் கெடுக்கனுமாக்கும்.. சுத்த நான்சென்ஸா இல்ல " என்று சளிப்பாக கூறியவன் ,சில நொடிகள் கழித்தே " சாரி மீரா நான் உன்னைக் குத்திக் காட்டனும்னு சொல்லல " என்று மன்னிப்புக் கேட்டான்..

" ஓ தெரியாம.. சொன்னீங்க.. சரி அதைவிடு.. நேத்து என்னை வேலைய விட்டு தூக்குனதுக்கு அந்த மேனாமினிக்கி அப்பாவுக்கு நீ தேங்கஷ் சொல்லல "

" ஏன் மீரா தப்பாவே புரிஞ்சிக்கற.. எங்கம்மாவோட பர்த்டேக்கு அவங்க போட்டோவ சாரில போட்டுத் தரச் சொன்னேன்.. அவ்ளோ தான்"

சரி.. அதைவிடு.. என்னைப் பார்த்து வெக்கம் மானமே இல்லனு நீ சொன்னியா இல்லையா

ஓ சிட்.. மீரா.. நான் கடைய விட்டு வெளிய வந்தப் பிறகு உன்னை இப்பதான் பார்க்குறேன்.. நான் மேகாவ தான் பார்ட்டீ கேட்டானு அப்படி சொன்னேன்..ச்சே ... உன்னை அந்தமாறி பார்த்தவுடனே எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.. அதான் உடனே வந்துட்டேன்.. உனக்கு என்னாச்சு மீரா.. அங்கிள் ஆன்ட்டீலாம் எங்க " என்று பாவமாய் கேட்டவனை ஓங்கி கண்ணத்திலே அறைந்தாள் மீரா

" போதும்.. இதோட உன் ஆக்டிங்க நிறுத்திக்கோ கிருஷ்.. என்னைக் கொலைகாரியா மாத்தாத " என்று கைநீட்டி எச்சரித்தவள் , " ராம் அவனை வெளிய அனுப்பு  " என்று கூறிவிட்டு உள்ளே செல்லப் போனாள்..

நிலா " மீரா என்னை நடந்துச்சுனு சொன்னா திரும்பவந்து தொல்லை பண்ணமாட்டங்கல்ல.. அந்த அங்கிள் எவ்ளோ பொறுமையா பேசறாரு.. நீயேன் எரிஞ்சு விழற " என்று கூற
அவளையும் கண்ணத்தில் ஓங்கி அறைந்தாள்..

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now