தன் சின்ன சிறிய கண்களை மூடி
துயில் கொண்ட தேவதை
இன்று இரத்த கண்ணீர்
வடிக்கின்றதுதன் சின்ன சிறிய கரங்களால்
வண்ணத்துப் பூச்சியுடன் விளையாட ஆசைப்பட்ட மனம்
இன்று சிவப்பு நிற இரத்தத்தை
தழுவியதுதன் சின்ன சிறிய சுவாச கமலத்தால்
வாசம் நிறைந்த மலர்களை
சுவாசித்த தேவதை
இன்று புகையும் உறைந்துப் போன
இரத்தத்தையும் சுவாசித்ததுதன்னை சுற்றி நடப்பது அறியாது
தன் சிறிய விழிகளால்
வழி மேல் விழி வைத்து
இதழில் சிறிய புன்னகையுடன்
இறந்தப் பெற்றோருக்கு காத்துக் கொண்டிருக்கும்
சின்ன சிறி(ரி)ய தேவதை!
YOU ARE READING
கவிதைகள்
Poetryஇது கதை அல்ல!!! என்னுடைய உணர்வுகளின் கிறுக்கல்!! எழுத்து பிழை இறுந்தால் பெரிய மனது கொண்டு என்னை மனிக்கவும்!! என்னுடைய கவிதையை படித்தற்கு நன்றி!!! பிறர் உடைய நூலை களவுவது தவறு!!! அத்தவறை செய்யாதிர்கள்!!!!!!