☘2☘

2.7K 156 115
                                    

"அவந்திமா! என்னடா செய்துக் கொண்டிருக்கிறாய்?" என்று வினவியபடி அவந்திகாவின் அறையினுள் நுழைந்தார் ராதா.

"ஆங்... சும்மா பிரெண்ட்ஸ் கூட தான் பேஸ்புக்லயும், மெஸஞ்ஜர்லயும் சாட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்மா!" என்று டாப்பை தட்டிக் கொண்டிருந்தாள்.

"ம்... நல்லா செமஸ்டர் முடிந்து உனக்கு காலேஜ் லீவ் விட்டாலும் விட்டார்கள், எந்நேரமும் இதையே கட்டிக் கொண்டு அழுகிறாய்!" என்று அழுத்தபடி அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தார் அவர்.

"வேறு என்னம்மா செய்ய சொல்கிறீர்கள்? வீட்டிலிருப்பதால் ஒரே போர். பிரெண்ட்ஸோடு வெளியே எங்கேயாவது ப்ளான் பண்ணலாம் என்றால் வெயில் மண்டையை பிளக்கிறது!" என்று சலிப்போடு தன் தாயின் முகம் பார்த்தாள்.

"எதற்கெடுத்தாலும் இதை ஒன்று சொல்லி விடுவீர்களே போர் போர் என்று. எவன் தான் இந்த வார்த்தையை கண்டுப்பிடித்தானோ, கல்லூரியில் படிக்கின்ற பெண்களுக்கு மிகவும் யூஸ் ஆகிறது!" என்று கூறியவர், "சரி... வீட்டு வேலை, சமையல் என்று எதையாவது உருப்படியாக கற்றுக் கொள்ளலாம் இல்லையா? பொழுதும் நன்றாக போகும் போரும் அடிக்காது!" என்று எல்லா அம்மாக்களையும் போல் நைஸாக தன் பிட்டை போட்டார்.

"அம்மா!" என்று பொய்யாக அதிர்ந்த அவந்திகா, "என்னம்மா பேசுகிறீர்கள் நீங்கள்? வீட்டு வேலை செய்வதற்காகவா கல்லூரியில் விடுமுறை விட்டிருக்கிறார்கள்... தினமும் அலைந்து திரிகிறீர்களே ஜாலியாக ரெஸ்ட் எடுங்கள் என்று தான் லீவ் விட்டார்கள்!" என்றாள் அலட்டலாக.

"ம்... நன்றாக பேசுவாயே, சரி அப்படியே வைத்து கொண்டாலும் இப்பொழுது தான் நீ கோர்ஸையே முடித்து விட்டாயே பிறகென்ன?"

"ப்ச்... அம்மா! சும்மா வேலை வேலை என்று சொல்லி கொண்டு, எனக்கு வேலை செய்ய தெரியாதா என்ன? அது தான் எதற்கெடுத்தாலும் பேகை எடுத்துக் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை விசேஷத்துக்கு போகிறேன் என்ற போர்வையில் டூர் கிளம்பி விடுவீர்களே, வீட்டிற்கு ஒரு பத்திரிக்கை வந்து விடக் கூடாது. அப்பொழுது எல்லாம் அந்த இரண்டு, மூன்று நாட்கள் நானும் அப்பாவும் தானே சமைப்போம்!" என்று வாதாடினாள்.

அழகே அழகே... எதுவும் அழகே!Where stories live. Discover now