அதிகாலை மூன்று மணி அளவில் வீரராகவனுக்கு இதயவலி என்ற செய்தி கேட்டு மகனை எழுப்பி இழுத்துக் கொண்டு வந்திருந்த மகாலட்சுமிக்கு ஷர்மினியை பார்த்ததும் பழையது அனைத்தும் நினைவிற்கு வந்தது. அவர்களின் இழப்பு என்ன இலேசானதா?
அவரின் பிள்ளைகள் இருவரையுமே அல்லவா அவர் இழந்து விட்டார்.
கணவருக்கு பார்வதிக்கும் தெரியாமல் கண்களை துடைத்து கொண்டவர் கணவர் பக்கம் திரும்பி அமரும்போது அங்கே ஷர்மினி இல்லை. எழுந்து சென்றிருந்தார். பார்வதியும் கணவருக்கு ஜூஸ் கரைத்து கொண்டிருந்தார்.
"என்ன மகா இப்ப ஏன் இந்த அழுகை?"என்றார் வீரராகவன்.
"பின்னே உங்களுக்கு இப்படினா எனக்கு அழுகை வராதா?"என்று சமாளித்தவரை ஊன்றி பார்த்தவர் கண்கள் உன்னை நான் அன்றி யாரறிவார்?என்றது.
அவருக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் மகாலட்சுமி.
வெளியே வந்த ஷர்மினியின் கண்கள் ஏனென்று அறியாமல் வருணை தேடி அலைந்தது.
அப்பொழுது எங்கோ வெளியே போயிருந்த அர்ஜுன் வீரராகவன் பார்வதி புதல்வன் வீட்டினுள் நுழைந்தான்.
ஷர்மினியை பார்த்ததும்...
"ஏய் பொண்டாட்டி நீ எப்ப வந்த?"என்றான்...
அதுவரை கூடத்தில் சோபாவில் அமர்ந்து கையில் இருக்கும் மொபைலை நோண்டி கொண்டிருந்த வருண் நிமிர்ந்து யாரை சொல்கிறான் என்பது போல் பார்த்தான்.அங்கே நின்றிருந்த ஷர்மினியை பார்த்து யாரோவென தலையை மறுபடியும் மொபைலுக்கு கொடுத்து விட்டான்.
இது வரை அவனையே பார்த்திருந்த ஷர்மினிக்கு அவனின் செய்கை இரத்த களரியை உள்ளுக்குள் உருவாக்கியது.
"இவன் என்ன என்னை ஆடோ மாடோங்குராப்புல லுக்கு விடுறான். நான் என்ன அவ்வளவு சப்ப பிகராவா??(figure) இருக்கேன்.."என்று வந்த ஆத்திரத்தை அர்ஜுன் மேல் பாய்ந்தாள்.
YOU ARE READING
செந்தூரா (காதல் செய்வோம்)
Romance"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.." "ஏண்டா??" "என்னது டா வா?" "ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. " "டானா பிச்சிபுடுவேன் பிச்சி..." "சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மா...