அத்தியாயம் 55

480 17 8
                                    

கௌஷிக் பாட்டியை  நோக்கி வருவதை கண்டவுடன் , அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்த இளவட்டங்கள் மூவரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றனர்.

அம்பிகா பாட்டியின் அருகில் வந்தவன் , பக்கத்தில் இவனையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்த மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு , பாட்டியை நோக்கி திரும்பினான்.

என்ன? என்ற கேள்வி தொக்கி நின்றபடி பாட்டியும் அவனை பார்த்தார்.

நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...

சொல்லு பா... என்ன தான் அவர் முகத்தில் எதையும் காமிக்காமல் கேட்டாலும் , அவரது குரலில் இவன் மேல் இருக்கும் கோவமும், சலிப்பும் நன்கு தெரிந்தது.

அ...அது.. நா... நா. . என்னன்னா..

எதையும் சட்டென்று பேசி பழக்கமுள்ளவன் , இன்று இப்படி திணறுவது அவருக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது... சுற்றி இருந்தவர்களுக்கும் தான்...

மெதுவாக அவருக்கும முன் மண்டியிட்டு அமர்ந்தவன்... அவர் கண்களை பார்த்து சொன்னான்...

எனக்கு மீரா வேணும்... அவ இல்லாம என்னால இருக்க முடியாது... அவளுக்கும் என்னைவிட்டுட்டு இருக்க முடியாது...I LOVE HER... I LOVE HER SO MUCH...

அவனது வார்த்தைகளை கேட்டு கண்கள் தெறித்துவிடும் அளவுக்கு விரித்தவர் , என்ன சொல்வது என்று தெரியாமல் பேச்சிழந்து நின்றார்.

கௌஷிக் மீராவை விரும்புகிறான் என்பது அவர் அறிந்த ஒன்றே, அவனை அதற்க்கு ஒத்துக்கொள்ள வைக்க வேண்டி ஏதேதோ செய்தவரும் இவர் தான்... இருந்தும் அவன் இப்படி தன் மனதை இந்த நேரத்தில் இப்படி சட்டென்று வெளிக்காட்டுவான் என்று துளியும் எதிர்பார்க்காத அவரால் , அவனின் இந்த இன்ப அதிர்ச்சியை தாங்கவே முடியாது வாயடைத்து அமர்ந்திருந்தார்.

அகிலன் தன் காதில் விழுந்தது சரிதானா... ?என்ற குழப்பம் ஏற்பட , தன் எதிரில்நின்ற பெண்களை பார்த்தான். தான்வி வாயை கைகளால் மூடியபடி, கண்களை விரித்துக்கொண்டு கௌஷிக்கை பார்த்தபடி நிற்க,

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now