மச்சி .... இங்க வாடா...
என்ன டா... இப்படியா பச்ச புள்ள மாதிரி குடிக்கரது...
ஆமா டா... இவன் பிஎச்டி வாங்கிருக்கான்... குடிக்கரதுல...
அந்த சரக்க சொல்லு மச்சி...
என்று அந்த club பில் அகிலன் மற்றும் அவனது உற்ற நண்பர்களான தருண் , பிரகாஷுடன் இன்னும் சில நண்பர்களும், கூடவே அர்ஜுன்(koushik's PA) என்று கூட்டமே ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசிக்கொண்டும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் இருந்தனர் .
அங்கு சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்த ஹிந்தி பாடலும் ,அதற்கு ஏற்றார் போல ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்த இளைஞர், இளைஞிகள் பட்டாளமும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லாமல் இருந்தது.
இதை எல்லாம் 'ஆ' என்று பிளந்த வாயோடு சிவா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க , அங்கே உம்மென்று தன் அணைந்திருந்த மொபைலையே பார்த்துக் கொண்டிருந்த தான்வியை கவலையோடு பார்த்தாள் மீரா.
எப்பையும் சந்தோஷமாக இருப்பவள், இன்று முகம் வாடி ,ஒரு இறுக்கத்தோடு இருப்பது மீராவிர்க்கு பொறுக்கவில்லை.
தான்வி நீ விஷ்ணு க்கு கால் பண்ணு... விஷயத்தை சொல்லு....
அது சரி வராது அண்ணி...
ஏண்டா?
அவன் என்னை லவ் பன்றானானே கன்பார்மா தெரியாது அண்ணி, எதோ பார்த்தான் , பேசினான்... அதை வெச்சு நானே முடிவு பண்ணிட்டேன்... நானே ஆசைய வளர்த்துக்கிட்டேன்... அப்படி இருக்கப்ப , நான் என்னன்னு அவனிடம் பேசறது.
ம்ம்... நீயே... நோ நோ... அது சரி வராது...
ஆமா அண்ணி, நானே என் காதலை சொல்றது சரி வராது... ஏன்னா அகியோட best friend விஷ்ணு. அவனுக்கு இந்த மாதிரி எண்ணம் இல்லாம நான் சொல்லி அவன் வேண்டாம்னு சொல்லிட்டா, அப்பறம் பார்க்கும் போது எல்லாம் ரெண்டு பேருக்கும் சங்கடம் தானே...
ம்ம்...என்றவாறு , அடுத்தது என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியானாள் மீரா.
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை