ஆமா ஷிவா...
சூப்பர் ... அவரே வந்துட்டாரு... தான்வி அவருகிட்ட பேசு டி... என்று ஷிவா உறைந்து நின்றிருந்த தான்வி யை உலுக்கினாள்.
ஆனால் தான்வியோ எதும் பேசாமல் அங்கிருந்த சேரில் விஷ்ணு விற்கு முதுகு காமித்தபடி அமர்ந்து வெயிட்டரை கூப்பிட்டு ஜூஸ் ஆடர் செய்தாள்...
அவளுடைய இந்த முகத்திருப்பளை எதிர்பார்க்காத விஷ்ணு வின் முகமோ ஏமாற்றத்திற்கும் ,குழப்பத்திற்கும் சென்றது .. இருந்தும் மீரா வை பார்த்து கை அசைத்துவிட்டு நகர்ந்தான்.
தான்வி , எதுக்காக இப்படி பண்ற... அவரே வந்திருக்கரப்போ நீ இந்த மாதிரி நடந்துக்கரது தப்பு டா..
எனக்காகவா வந்திருக்காரு?? அண்ணா வ பார்க்க தானே... வேணும்னா என்னோட வருங்கால புருஷனையும் சேர்த்து பார்த்திட்டு போகட்டும்...
அவளது பேச்சுக்கு பதில் இவர்களிடம் இல்லாமல் போக சகோதரிகள் வாயை மூடிக் கொண்டனர்.
அச்சோ ... தான்வி... அங்க பாரு உங்கண்ணாவுக்கும், விஷ்ணு விர்க்கும் சண்டை போல ... என்று ஷிவா பதற... மீரா வும் தான்வியும் ஷிவா காட்டிய திக்கில் பார்த்தனர் .
அங்கே கோபமாய் விஷ்ணு அகிலனிடம் ஏதோ சொல்ல, அகிலனோ அதை கண்டுக்காதவனாய் கிளாசில் இருந்த திரவத்தை சோஃபாவில் அமர்ந்தபடி பருகினான்...
பக்கத்தில் அமர்ந்திருந்த தருணும், பிரகாஷும் கூட ஏதோ சொல்ல... அவர்களுக்கு கோவத்தில் முகம் சிவக்க ஏதோ பதில் அளித்துவிட்டு அங்கிருந்து வேக வேகமாக சென்றான் விஷ்ணு...
அவனை சமாதானப்படுத்தும் நோக்கோடு தருனும், பிரகாஷும் விஷ்ணு சென்ற வழியே பின் சென்றனர்.
என்ன சண்டைனு தெரியலையே ... பேசாம நீயே பேசிருக்கலாம் தான்வி... இப்போ பிரச்சனை பெரிசா ஆகிடும் போல...
ஒரு வேளை உங்க அண்ணாட்ட உன்னை பொண்ணு கேட்ருப்பரோ??? அதுக்கு உங்க அண்ணா முடியாதுன்னு சொல்லிட்டாரா??? என்று ஷிவா அவளது மனதில் தோன்றியதை எல்லாம் புலம்பிக் கொண்டிருக்க...
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
அத்தியாயம் 44
Start from the beginning