22 கோபக்கார கணவன்
வாசுதேவனின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அபராஜித் பேசிக் கொண்டிருப்பது மீராவைப் பற்றியா? வாசுதேவனுக்கு அபராஜித்தை பற்றி நன்றாகவே தெரியும். பெண்கள் விஷயம் என்று வந்துவிட்டால், அவனைப் போல் வெட்கம் கெட்டவன் யாரும் இல்லை. எவ்வளவு கீழே இறங்கவும் தயங்காதவன். தான் விரும்பிய பெண்ணை படுக்கைக்கு கொண்டு செல்ல, எதையும் செய்யத் துணிபவன். அவனை பொறுத்தவரை, பெண்கள் என்றாலே படுக்கையறை பதுமைகள் தான்.
"என்னா பொண்ணு அவ...!" என்றான் அபராஜித்.
"மீராவை உனக்கு எப்படி தெரியும்?" என்றான் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.
"அவளோட போட்டோகிராஃப்ஸ் ஜான்சன் கிட்ட இருந்ததை பார்த்தேன். நான் அந்த மாடலை பாக்கணும்"
"அவங்க மாடல் இல்ல. என்னோட பிஏ"
"ரொம்ப நல்லதா போச்சு..."
"அபராஜித், அவங்க நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல"
"அவ எந்த மாதிரி வேணும்னாலும் இருக்கட்டும். நான் அவ கிட்ட பேசுறேன்"
"அவங்க வேற எந்த கம்பெனிக்காகவும் மாடலிங் செய்ய மாட்டாங்க"
"ஏன் செய்ய மாட்டா? நீ கொடுத்ததை விட நான் அதிகமா கொடுத்தா செய்ய மாட்டாளா?" என்றான் விஷம புன்னகையோடு.
"அவங்க என்னோட ஃபிரண்ட்"
"இப்ப தானப்பா அவங்க உன்னோட பிஏன்னு சொன்ன?"
"அபராஜித், புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. நான் ஃபோட்டோ ஷூட்டை முடிச்சே தீரனும் அப்படிங்கற அவசரத்தில் இருந்ததால, அவங்களை மாடலிங் பண்ண சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டேன். அதனால அவங்க செஞ்சாங்க"
"அப்படின்னா, கொஞ்சம் கஷ்டப்பட்டா அவ மனசை மாத்திடலாம். அப்படி தானே?""அவங்க மாடலிங் பண்ண ரெடியா இல்ல. அவங்க என்னோட ஃப்ரெண்ட் அப்படிங்கறதால மட்டும் தான் ஒத்துக்கிட்டாங்க. அதுவும் புடவை கட்டிக்கிட்டு நடிக்க சொன்னதால தான் ஒத்துக்கிட்டாங்க"
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...