அத்தியாயம் 23

Почніть із самого початку
                                    

சட்டென்று நிறுத்திவன் மனது சொன்ன பதிலில் அவனுக்கு உடன்பாடு இல்லை. தனக்கு வஞ்சனையில்லாமல் அன்பை வாரி வழங்கும் பெண்! தன் அன்பை வரைமுறை இல்லாமல் பெற்றுக்கொள்ளும் பெண்! இரண்டுமே இவள்தான். இவனின் இன்னொரு தாய். ஒவ்வொரு நாளும் இவன் தேடிய ஒரு பெண்ணை  கண்டு பிடிக்க முடியாமல் இவன் ஓய்ந்து வரும் போதெல்லாம் மடி தந்து அணைத்துக்கொண்ட அன்பு பெண் இவள்தான். அதற்காக சில வருடங்களாக மனதில் உலா வந்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த பொல்லாத மனது திடீரெண்டு இவள் மேல் எப்படி காதல் கொள்ளலாம்?!" அவள் 'யாரையாச்சும் லவ் பண்ணுறியா?' என்று இவனிடம் கேட்ட மாத்திரத்தில் "ஆமாம் உன்னைத்தான் லவ் பண்ணுறேன்." என்று எப்படி இந்த மனம் பதில் சொல்லலாம். தப்பு, இன்று ஏற்பட்ட மன அழுத்தம் இந்தமாதிரி ஒரு எண்ணத்தை எனக்குள் திணித்துவிட்டது என்று அப்போதே அந்த எண்ணத்தை துடைத்தெறிந்தான்.

இவனின் சிந்தனை போகும் திசை தெரியாமல் "சொல்லமாட்டியா வேது" என்றாள் ஒரு கெஞ்சலுடன். அவளின் முகம் காட்டிய ஜாலம் இவனை மறுபடியும் சுயத்தை இழக்க வைத்தது. இரண்டாவது முறையாக அவளின் இதழை மென்மையாக தீண்டினான். மீண்டும் மீண்டும் அதையே செய்ய தூண்டிய மனதை கடிவாளம் போட்டு அடக்கினான் அவன். அவள் சொல்லாமல் இன்று விட போவதில்லை என்று உணர்ந்தவன் ஒரு கதையை கூறினான்.

"முத்தா செல்லம் பணம் தேவைக்கு மட்டும்தான் இருக்கணும். இல்லாம அளவுக்கு அதிகமா இருந்தா அது அழிவுக்குதான் நம்மளை இழுத்து செல்லும். என்னையும் அப்படித்தான் இழுத்து சென்றது. ரொம்ப சின்ன வயசிலேயே எல்லா கெட்ட பழக்கத்துக்கும் பழக்கப்பட்டு அது என் உடம்பை பாதிச்சிடிச்சு." என்றவனை இடையில் நிறுத்தினாள் அனுமித்ரா.

"இப்பவும் உனக்கு சின்ன வயசுதானே! அப்போ ஸ்கூல் ல இருந்து எல்லாதத்தையும் ஆரம்பிச்சிட்டியா?" என்று அவள் கண்ணை விரித்துக்கொண்டு ஆச்சரியமாக கேட்க "பாதி அப்பவே, மீதி காலேஜ் படிக்கும் போது." என்றான் அவன் எங்கேயோ பார்த்துக்கொண்டு.

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now