அவனின் ஸ்பரிசம் சொன்னது அவனின் வேதனையை. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவனின் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். சிறிது நேரம் அமைதியாக இருந்துக்கொண்டு அவனுக்குள் ஆழமாக புதைந்தவள் "யாரை தேடி அலையுற வேதும்மா? எதுக்காக இந்த கூட்டத்தில் தேடுற?" என்று அவன் மனதை சரியாக படித்து அவன் நாடி துடிப்பின் வேகத்தை தூக்கினாள் அவனின் குட்டி மனைவி. அவனின் அதிர்ச்சி அவளுக்கு மறைக்கப்பட்டது மிகவும் கவனமாக.
"இல்ல அப்படி ஒன்றும் இல்லை." என்றான் சமாளிப்பாக.
"இல்ல யாரையோ தேடுற. அந்த பெண்ணை நீ தொட்டு தடவியதிலேயே எனக்கு புரிஞ்சுது. தேடி இவ அவ இல்லங்குற மாதிரி உன் முகம் ஏமாற்றத்தில் துடிச்சுது! நான் பார்த்தேன்!" என்றாள் அவள் விடாமல்.
"இல்லம்மா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல பொண்ணுல்ல என் முத்தா குட்டி! கொஞ்ச நேரம் எதுவுமே கேட்கமாட்டாளாம் சரியா. நான் இன்னைக்கு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இந்த பெண்ணை இங்கே கூட்டிட்டு வந்து உன்னை ரொம்பவே கஷ்டபடுத்திட்டேன். உன் பாஷையில் இது நாடக கல்யாணம் என்றாலும் நாம் இரண்டு பேரும் ஒரு நாளும் அப்படி பழகலையே. உன்னை தவிர்க்கணும் என்று நானும் நினைக்கல, என்னை விலக்கனும் என்று நீயும் நினைக்கல. நமக்குள்ள பிசிக்கல் அட்டாச்மென்ட் மட்டும்தான் இல்ல. மற்றபடி நீயும் நானும் ரொம்பவே நல்ல கணவன் மனைவிதான். என் குட்டி மனைவி!" என்றவன் அவளை இன்னும் அழுத்தமாக அணைத்தான். அவனின் பேச்சில் அவளுக்குமே அந்த அணைப்பு தேவைப்பட்டது.
"என் குட்டி மனைவியை நான் இவ்வளவு கஷ்டபடுத்திட்டேனே. ஏங்கி ஏங்கி அழ வச்சுட்டேனே! சாரிம்மா. சாரி." என்றவன் அவள் கை கொண்டு தன் கன்னத்தில் அறைந்தான்.
"போ வேது. எனக்கு தூக்கம் வருது. நீ ரொம்ப கவலைப்படாதே. நீங்க இரண்டு பேரும் ஏதாவது தப்பா பண்ணிட கூடாதுன்னு நான் பயந்து போய் அழுதேன்." என்றாள் அவள். அது இன்னும் கொடுமை அல்லவா என்று அவன் மனம் கூற வார்த்தை அங்கே அதன் வலிமையை இழந்துவிட்டது. இவன் வலி தீர அவளின் முகத்தை முத்தத்தால் புண்ணாக்கினான். எதையுமே மறுக்காமல் ஏற்றுக்கொண்டவள் அவன் நிறுந்துவதாக தெரியவில்லை என்று உணர்ந்து "எதுக்காக வேது பொண்ணுங்கள தேடி போற? என்னிடம் சொல்ல மாட்டியா? யாரையாச்சும் லவ் பண்ணுறியா?" என்று கேட்டு அவன் முத்தங்களுக்கு சடன் ப்ரேக் போட வைத்தாள் இவள்.
STAI LEGGENDO
கடிவாளம் அணியாத மேகம்
Storie d'amoreகடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும்...
அத்தியாயம் 23
Comincia dall'inizio