மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

Par _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... Plus

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 15 ❤

5.9K 215 87
Par _meera99

❤என்றுமில்லா
வேகம் என்
துடிப்பில்..
கூர்ந்து கேட்டிட
உன் பெயர்
சொல்லிட
கேட்டேன் என்
இதயம்..❤

"கங்க்ராட்ஸ் மிஸ்டர் என்ட் மிஸஸ் சக்தி.." தனியாக ஓர் குரலோடு கைதட்டல் ஓசையும் ஒலிக்க இருவரும் அத்திசையில் பார்க்க முன்னால் வந்து நினறவளைப்பார்த்து "தீக்ஷா.." என முணுமுணுத்தன சக்தியின் உதடுகள்.

"சார் அது எப்படி உங்க பெயர் மட்டும் சொல்லலாம் அவங்க..நானும் கூடவே தான வந்தன். கூடவே தான இருக்கன் இவ்வளோ நேரம்.." எம்பி நின்று சக்தியின் காதில் முணுமுணுத்தாள் சாரு.

இப்ப இது ரொம்ப அவசியம்..என்ற பார்வையை மட்டும் அவளிடம் வீசி விட்டு தன் பார்வையை தீக்ஷா பக்கம் திருப்பியவன் அவள் கூறியதை மறுக்க போகவும் அவளே தொடர்ந்து பேசினாள்.

"என்ன சக்தி சொல்லாம மேரேஜ் பன்னிகிட்டிங்க..அதுவும் என்ன மறக்கலாமா சக்தி சொல்லுங்க" அவனை ஆழமாக பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

"எனிவே இந்த டேபிள் நாங்க 'best couple of the day' ற்கு ரிசேவ் செய்திருந்தம்...என்ட் நவ் யு ஹவ் காட் இட்..ப்ளீஸ் கம் டு தி ஸ்டேஜ் மிஸ்டர் என்ட் மிஸஸ் சக்தி.."

கைதட்டல்கள் மீண்டும் ஒலிக்க ஒரு கணம் சிந்தித்தவன் சாருவை பார்க்க அவன் நினைத்தது போலவே அவள் எதுவும் புரியாது விழித்துக்கொண்டு தான் இருந்தாள்.

திரும்பி தீக்ஷாவை பார்க்க அவள் கண்களில் தெரிந்த தோல்வியின் வலியும் கோபமும் சக்தியை சொல்ல முடியாத சந்தோஷத்தில் ஆழ்த்தியது. வெற்றிப்புன்னகை மிளிர சாருவின் பக்கம் திரும்பியவன் அவள் வலது கையை அழகாய் பற்றினான் ஆனால் அவளது கவனம் எங்கோ இருக்கவும் ஒரு முறை சக்தி சாருவின் கையை மென்மையாய் அழுத்த குழப்பத்தில் இருந்து விடுபட்டவள் சக்தியின் புறம் திரும்பினாள். இருவரும் கண்ணோடு கண் நோக்க அவ்வழகிய தருணம் அழகாய் படம் பிடிக்கப்பட்டது.

அவளை அழைத்துக்கொண்டு மேடை ஏறப்போனவன் தீக்ஷா அருகில் கொஞ்சமாய் தாமதித்து  " finally its me..." என்று கூறிவிட்டு செல்ல...
கோபத்தை அடக்க வழி அறியாது அவன் போகும் திசையிலேயே இயன்றளவு முறைத்துக்கொண்டு இருந்தாள் தீக்ஷா..ஆனால் அவளது உதடுகள்  மட்டும்..இதுக்கெல்லாம் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவ சக்தி என்று முணுமுணுத்தன..

சக்தியின் பின்னே அவன் இழுப்பிற்கே நடந்தாள் சாரு..மேடை ஏறிய இருவரையும் ஆடைகளை ஆடர் தந்த மணமகளின் தந்தையே முன்னால் வந்து அழைத்து தன் கையால் விருதை வழங்கிவிட்டு.." என்ன தம்பி நீங்க இரண்டு பேரும் ஹஸ்பன்ட் என்ட் வைப்பா சொல்லவே இல்ல பாருங்க.. ஆனா பொருத்தம் ரொம்பவே நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.." அவர் கூறி முடியவும் சக்தி எதிர்பார்த்தது போலவே சக்தியின் கையை இழுத்து அவனை அவள் உயரத்திற்கு குனிய வைத்த சாரு..." ஹாஸ்பன்னு வைபு ன்னா என்னது?" கிசுகிசுப்பாய் அவள் வினவ..

" நான் பாஸ் நீ என்கிட்ட வேலை செய்யுற அத தான் அப்படி சொல்லுறாங்க.." என்று அவன் விளக்கவும் அவளும் அழகாய் சிரித்து புரிந்ததாக தலையாட்டினாள். ஆனால் சக்தி அறியவில்லை தன் சுயநலத்திற்காய் இன்று கூறிய பொய் சாருமதியின் வாழ்வையே நாளை புரட்டிப்போடும் என்று.

"அப்போ இது எதுக்கு? " அவள் அந்த விருதை சுட்டிக்காட்டி கேட்க..
அது என்று கொஞ்ச நேரம் சிந்தித்தவன்.." அது நீ அந்த ட்ரெஸ் எல்லாம் அழகா செய்து கொடுத்ததுக்கு." அவன் கூறவும் சாருவும் சரி என்று நின்று கொண்டாள்.

மேடையின் கீழ் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்.
"சார் இன்னக்கி ஷோ நீங்க இரண்டு பேரும் தான் செய்யனும்..கம் ஆன்..ஒரே ஒரு டான்ஸ்" என்று கூச்சலிடவும் பின்னனியில் பாடலும் ஒலித்தது...

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

சாரு திரு திரு என விழிக்க அவளருகில் வந்த சக்தி அவள் இடை பற்றி தன்னுடன் இணைத்து மறுகையை அவள் கையுடன் பிணைத்து கொண்டான்..."சார்..என்..ன பன்னுறீங்க.." சாரு கையை விலக்க முயலவும்.."உஷ்.."என அவள் இதழ் மேல் ஒற்றை விரலை வைத்து அமைதிப்படுத்தினான் சக்தி. சாருவிற்கு அந்த தீண்டல் உள்ளே சிலிர்க்க கண்களை விரித்து சக்தியை பார்த்தாள்.

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

சாருவிற்கு என்ன நடக்கிறது என புரியாதது ஒரு பக்கம் என்றால் நடனம் ஆட வேறு தெரியாது என இருக்க..சக்தி அவளை நடனமாடச்செய்ய சாருவும் சக்தியுடன் இணைந்து கொள்ள..அவர்களின் நடனம்.. இருவரின் விழிகளும் கலந்து வடித்த உணர்வும் கலந்திருக்க அனைவரும் மெய் மறந்து இரசித்தனர் இரு விழிகளைத்தவிர அது மட்டுமே வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

கடைசியாக அவள் கைபற்றி சுழற்றியவன் தன் பக்கமாய் இழுக்க கொஞ்சமாய் தடுமாறியவளை தன் கரங்களில் தாங்கிக்கொண்டான்.. பாடல் முடிந்தும் இருவரும் அதே நிலையில் விழிகள் இரண்டும் கலந்திருக்க..பார்வையாளர்களும் மெய் மறந்திருக்க தீக்ஷா பொறுக்க முடியாது பலமாய் கைதட்டினாள்.. அதன் பின்னே உணர்வு பெற்று இருவரும் விலகிக்கொள்ள அனைவரும் கைதட்டலும் காதைப்பிளந்தது.

சாரு உணர முடியாத ஏதோ ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தாள்..இதயத்துடிப்போ வேக வேகமாய் அடித்துக்கொண்டது.. மெதுவாய் நிமிர்ந்து அவள் சக்தியை நோக்க அவனோ ஒன்றுமே நடவாதது போல் தான் இருந்தான். இருவரும் கீழிறங்கி வர சக்தியின் முன்னால் வந்து நின்றாள் தீக்ஷா..

"சாரு நாம சீக்கிரமா கிளம்பனும்.. நீ போய் ஆன்டி அங்கிள்ட்ட சொல்லிட்டு வா." அவன் கூறவும் சரி என தலை ஆட்டி விட்டு நகர்ந்தாள் சாரு.

அவள் சென்ற பின் தீக்ஷா புறமாய் திரும்பிய சக்தி.." தீக்ஷா என்ன இப்படி இருக்க.. ஆர் யு ஓகே..? என்னாச்சி பீவர் ஏதுமா? நான் வேணும்ணா..."

"ஸ்டொப் திஸ் Nonsense.." கோபத்தில் கண்கள் சிவக்க சத்தமிட்டவளை கைகளை பாக்கெட்டினுள் நுழைத்துக் கொண்டு கூலாக பார்த்தான் சக்தி.

"என்னடா ரொம்ப தான் துள்ளுர..நீ ஜெய்ச்சிட்டன்ன திமிரா.. உன் அன்பு மனைவி ஆருயிர் மனைவி சாருவ தூக்கிட்டு..அடுத்து ஒவ்வொருத்தரா உன் குடும்பத்துல தூக்கிட்டா வால ஆட்டிட்டே என் வழிக்கு வர மாட்ட.உன்னால என்ன பன்ன முடியும் என்னை..நான் யாரு தெரியும்ல..அதுவும் உன்னோட லவ்லி மம்மிய மட்டும் பர்ஸ்ட்..  " அவள் பேசிக்கொண்டே போக...
"ஏய்..." கர்ஜித்தவாறு ஒரு விரல் நீட்டி எச்சரித்தான் சக்தி..

அவன் ஒரு விரலை தன் ஒரு விரல் கொண்டு மடக்கிய தீக்ஷா.."ரொம்ப Strain பன்னிக்காத பேபி.. உன் வைப்ப வேற கவனமா கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கனும்ல ரிலேக்ஸ்.. ஓகே பார்க்கலாம் டாட்டா.."
முன்னே சென்றவள் மீண்டும் பின்னால் நடந்து அவனெதிரே வந்து.."தீக்ஷா ஜெய்க்க பொறந்தவ.." சொல்லிவிட்டு glasses ஐ அணிந்து கொண்டு நகரவும்..."சார் போலாமா.." என்றவண்ணம் எதிரே வந்து நின்றாள் சாரு..

தன் சுயநலத்திற்காக இந்த அப்பாவி பெண்ணை சிக்கலில் மாட்டி விட்டோமோ என முதன் முறையாய் எண்ணினான் சக்தி..

****************

காலைநேரம் குளிர் ஊசியாய் அவள் உடையையும் தாண்டி குத்த..இன்னும் கொஞ்ச தூரம்தான் இருந்த போதும்..  கஷ்டமாய் இருந்தாலும் மெதுவாகவே அந்த தேயிலைத்தொட்டங்களை கண்களில் நிரப்பிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் மாயா.

பத்து நிமிட நடையின் பின் கம்பீரமாய் நின்று கொண்டிருந்த அந்த காலத்தில் கட்டப்பட்டிருந்த  அந்த சிறிய மாளிகை முன் வந்திருந்தாள். எப்படியும் சாரதாம்மா சாப்பிட்டிருக்க மாட்டாங்க எண்ணியவாறே கேட்டை திறந்து கொண்டு உள்ளே அவசரமாக நுழைந்தாள்.

வீட்டினுள் சென்றவளின் முன் கோபமாய் வந்து நின்றார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி.
" எத்தன தடவ சொல்லுறது மாயா உனக்கு..குளிருல வெளில போகாதன்னு..இங்க பாரு எப்படி கை எல்லாம் குளிரா இருக்குன்னு.. பேஸ் எல்லாம் கூட சிவந்து போச்சு.. வா சூடா காபி போட்டு தர்ரன்.. உஷ் ஒன்னும் பேச கூடாது வா." கோபமாய் முகம் இருந்தாலும் அன்பும் பாசமான கண்டிப்பும் மட்டுமே கலந்திருந்தது அவர் கண்களில்..

காபியை பருகி முடித்தவள் அருகில் வந்த சாரதா அன்பாய் மாயாவின் தலையை வருடிக்கொடுக்க அவரை பார்த்தவள் அவர் மடியில் தஞ்சம் புகுந்திருந்தாள்.

"சாரதாம்மா.."
மெதுவாய் மாயா அழைக்க..

"சொல்லுடா.."

" மதன் சார் நாளைக்கு வாரார்ல.."

ஹ்ம் என்பது மட்டுமே அவர் பதிலாய் இருந்தது.." ஏன்மா? " மாயா மீண்டும் வினவ..

" என்னடாம்மா சொல்லுறது.. பத்து வருஷம் கழிச்சி அம்மாவ நினைவு வந்திருக்கு.. இந்த பத்து வருஷத்துல ஒரு கால் கூட இல்ல.. வாரது கூட இப்ப இங்க இரண்டு நாள் இருக்கத்தான் அதுவும் அவன் நண்பன் தான் சொல்லி எனக்குதெரிய வேண்டி இருக்கு.. விடும்மா எனக்கு இந்த மயூ குட்டி மட்டும் போதும்."

மடியிலிருந்த மாயாவை அணைத்து அவள் தலைமேல் படுத்துக்கொண்டார் சாரதா..அவளும் அவரை அன்புடன் அணைத்துக்கொள்ள கீற்றாய் கன்னம் வழியே வழிந்து சென்றது கண்ணீர்.

Continuer la Lecture

Vous Aimerez Aussi

150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
101K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom
49.9K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
2.7K 493 25
முஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அ...