❤ 01 ❤

476 39 25
                                    

     ஊர் நடுவிலே காணப்பட்ட அந் நவீன வசதிகளுடன் கூடிய ஹோட்டலை ஒட்டிய திருமண மண்டபத்தில் ஒரு வாரமாக மொத்த ஊர் மக்களும் திரண்டு காணப்பட்டனர்.அனைவரும் ஆங்காங்கு கூடி திருமண வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.சிறுவர் பட்டாளமே ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.இளம் பட்டாளத்தின் கேலிக்கூச்சல்களும் குறைவில்லாமல் ஒலித்தன.மண்டபத்தின் முன் வாயிலில் பூக்களால் "JANANI weds PREM" என மணமக்களின் பெயர் பொறிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"ஏய்..ஜனனி...இன்னெக்கி நீ தான்மா கல்யாணப் பொண்ணு..இப்படி டென்ஷனா மொபைலும் கையுமா இருக்கிறாய்.." "மேடம்க்கு இன்னும் 2 நாளெக்கி ப்ரேம் அண்ணாவ பார்க்காம இருக்க முடியல போல..அதனால தான் இப்படி மொபைல்லயே கடல போடுறாங்க..." என மணப்பெண் ஜனனியின் தோழிகளான அஞ்சலி மற்றும் திவ்யா பேசி சிரித்துக்கொள்ள, தோழிகளின் கிண்டலில் மொபைலிலிருந்து கவனம் சிதறிய ஜனனி அவர்களை முறைத்த வண்ணம், "ஏன்டி இப்படி நேரம் காலம் தெரியாம படுத்துரீங்க..நான் நித்துவின் கோல்க்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..அந்த லூசுட்ட நான் படிச்சி படிச்சி சொன்னேன் என்னோட கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே இங்க இருக்கனும்னு..இன்னும் 2 நாள்ள கல்யாணம் இன்னும் கூட அவள் வரவில்ல..வரட்டும் அவளுக்கு இருக்கு.." என தன் உயிர்த்தோழி நித்ய யுவனி ஐ அர்ச்சித்தாள் ஜனனி."கடவுளே! இந்த இராட்சசி கிட்ட இருந்து எங்க நித்யாவ காப்பாத்து..." என மேலே பார்த்து உரக்கக் கூறிய திவ்யா ஜனனியின் அடியைப் பெற்றாள்.அவ் அறையே இவர்களின் சிரிப்பலைகளால் நிறைந்திருந்தன.

அதே நேரம் அங்கு மணமகனுக்கென ஒதுக்கிய அறையில்,"மச்சி..நீ பண்ணுறது உனக்கே நியாயமா இருக்காடா? இதோ நிக்கிறானே ஆரவ் அவன் 5 வருஷமா ப்ரியாவ காதலிச்சி ஒரு வழியா வீட்டுல எல்லா பேசி முடிச்சிட்டான்..வினோத் கல்யாணமே பண்ணிக்கிட்டான்..நம்ம மற்ற ப்ரென்ட்ஸ் மேக்சிமம் கொமிடட்..இங்க அப்பாவியா ஒரு ஜீவன் சிங்கிளாவே சுத்திட்டு இருக்கானே அவனுக்கு தங்கச்சியோட ப்ரென்ட்ஸ இன்ட்ரு பண்ணுவோம்னு ஒரு அறிவு வேணாம்?" என தனக்குத்தானே வக்காலத்து வாங்கிக்கொண்டு இருந்தான் ப்ரேமின் தோழன் ஹரிஷ்."ஹஹஹா..டேய் இப்படி கூட இன்டீரெக்டா சொல்ல முடியுமா மச்சி தங்கச்சி ப்ரென்ட்ஸ இன்ட்ரு பண்ணி வைக்க சொல்லி.." என பதிலுக்கு கலாய்த்தான் ஆரவ்."போதும்டா நிறுத்து..நான் டிரெக்டாவே சொல்றேன் எனக்கு அதுங்கல இன்ட்ரு பண்ணுடா..நானும் காலங்காலத்துல காதலிச்சி கல்யாணம் பண்ணி இந்த சிங்கிள்ஸ் சங்கத்துல இருந்து ஓரமாகிக்கிறேன்.." என்ற ஹரிஷின் கூற்றில் இவ்வளவு நேரமும் அமைதியாக தன் நண்பர்களின் கூத்தை வேடிக்கை பார்த்த ப்ரேம்,"ஹரி..நீ எவ்வளவு ட்ரை பண்ணிணாலும் யூஸ் இல்லை மச்சி..ஜானு ப்ரென்ட்ஸில் முக்கால்வாசி பேர் கொமிடட்.." ப்ரேமின் பேச்சில் கடுப்பான ஹரிஷ்,"மீதி கால்வாசி பேர் இருப்பாங்க தானே..நான் அதில் யாராவது ஒருத்திய கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்..டேய் சர்வேஷ் நீயும் வரியா என் கூட? என் ஆள பாக்க போறேன்..பார்த்து சேதி பேச போறேன்.." என பாடியவாறு ஹரிஷ் அவ் அறையை விட்டு வெளியேறினான்.இவ்வளவு கலவரம் நடந்தும் இது வரை அமைதியாக வேறு யோசனையில் இருந்த தன் உற்ற தோழன் சஜீவ் சர்வேஷ் ஐ அப்பொழுது தான் கவனித்தான் ப்ரேம்."டேய் சர்வேஷ்..என்னடா யோசனை?" என்று ஆரவின் உலுக்கலில் சுயநினைவடைந்தவன்,"ஆஹ்...ஒன்னுமில்லடா ஆரவ்..எங்க மற்ற யாரையும் காணோம்.." "அது சரி..சேர் இந்த உலகத்துலே இல்லையே மச்சான்.." என ப்ரேம் சர்வேஷின் முதுகில் அடித்தான்."சரி சரி வாங்க நாமலும் போகலாம்..இந்த ஹரி பையன் வெளியே என்ன கோமாளித்தனம் பண்ணுறானோ?" என்றவாறு ப்ரேமையும் சர்வேஷையும் வெளியே இழுத்துச் சென்றான் ஆரவ்.

நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!! (On hold )Where stories live. Discover now