❤ 10 ❤

150 18 3
                                    

அடுத்து வந்த 2 நாட்கள் சாதாரணமாக கடக்க நித்யாவுக்கு ஏன் மீண்டும் சென்னை வந்தோம் என்றிருக்க, சஜீவ்விற்கோ நித்யாவை எப்படி தன் வழிக்கு வர வைக்கலாம் என்றிருந்தது. சஜீவ்வின் இல்லத்தில் அன்று காலையிலேயே ஜீவிகாவும் வீரும் கிளம்பி வந்திருக்க விடிந்ததும் எழுந்து தயாராகி கீழே வந்தவன் நேராக ஜீவிகாவிடம் சென்றவன், "ஜீவி இன்னெக்கி உனக்கு ஹோஸ்பிட்டல் போணும்ல.. வா போலாம்.." என்க, அவனை ஜீவிகா சந்தேகக் கண்ணோடு பார்க்க, ஏற்கனவே ஜீவிகா வீரிடம் அனைத்தும் கூறியிருந்ததால் அவன் சஜீவ்வை நமட்டுப் புன்னகையுடன் நோக்கினான். ஈஷ்வரியோ இது எதுவும் தெரியாமல் பெரிதும் குழம்பி, " ஏன்பா உனக்கு இன்னெக்கி ஆபிஸ் போணும்ல.. அன்னெக்கி அவ்வளவு யோசிச்சாய்.. இன்னெக்கி நீயா வந்து கூப்புட்ராய்..." என்க, "வேலைய விட தங்கச்சி தானேம்மா முக்கியம்.. அதுவுமில்லாம நான் ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டேன்.." என சமாளித்து வைத்தான்.
( sorry guys..oru chinna wilakkam..namma hero awlo periya businessman ellam illanga.. foreign la knjm nal wrk pantu ipa sadharanama oru IT Company la wrk panran.. frnds pathi kooda sollalla..adhukana thewa waralla..bt na edhukum ippowe solli wekkiren..cuz pinnadi neenga confuse aaga koodadhula.. Prem Volkswagen Group Company la wrk panran.. Arav sondhama textiles business panran.. Harish Sajeev wrk panra adhe company la wrk panran... Janani oru ophthalmologist.. Anjali & Dhivya lecturers.. Priya oru hotel la receptionist a irukka..)
பின் ஜீவிகா,"அண்ணா நீ ஒரு விஷயம் மறந்துட்டாய்னு நினைக்கிறேன்.. டாக்டர் இருக்காங்கல்ல டாக்டர்..என் ஹஸ்பன்ட்ட கூட்டிட்டு தான் வர சொன்னாங்க.." என டாக்டரில் ஒரு அழுத்தம் கொடுத்து கூறினாள். அதைக் கேட்டு வீர் நகைக்க சஜீவ் வீரை முறைத்து விட்டு மனதினுள்,"ஏன்டா சர்வேஷ் இப்படி அநியாயத்துக்கு அவசரப்பட்டு ஜீவி கிட்ட மாட்டிட்டியே..சரி ஏதாச்சும் சொல்லி சமாளிக்கலாம்.." என நினைத்த வண்ணம், "என்ன ஜீவி நீ இப்படி சொல்லிட்டாய்.. ஒரு அண்ணணா தங்கச்ச பற்றி தெரிஞ்சிக்கிறது என்னோட கடமை.. இந்த சர்வேஷ் ஒரு போதும் தன் கடமையை தவற மாட்டான்.. மாப்பிள்ளை வந்தா என்ன.. நானும் உங்க கூட வந்து என்ன பிரச்சினைனு தெரிஞ்சிக்குறேன்.." என்க, ஜீவிகா தலையில் அடித்த வண்ணம்,"இல்லாட்டியும் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லாம போய்ட்டுண்ணா..." என்று அவனை திட்டிய வண்ணம் மூவரும் கிளம்பினர். ஈஷ்வரியோ,"இந்த காலத்து பசங்களை புரிஞ்சிக்கவே முடியல.." என புலம்பி விட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.

நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!! (On hold )Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin