மழை என நம்மை சிறு வயதில் தோன்ற வைத்திருந்தத் துாவாலைக்குழாய்யில் இருந்து வந்த மிதமான சூட்டில் இருந்த தண்ணீர், அவள் மெல்லிய தேகத்தில் படர்ந்துச் சென்றது. ரோஜாப் பூப் போல் மென்மையாக இருக்கும் அவள் மேனியில், முட்களாக மாறி இருந்தது, அவன் கொடுத்த காயங்கள். அவள் முதுகிலும், கைகளிலும் அவன் கரம் அழுத்திய காயத்தின் வலிகள் தண்ணீரிலும் தலர்ந்தபாடு இல்லை. ஒவ்வொரு முறையும் அவ்விடத்தில் தண்ணீர்ப் படர்ந்துப் போக, அவ்வலியை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள், அவள். கீழே சரிந்து அவிடத்திலியே விழுந்தவள், இருக் கைகளால் இரு புறமும் ஈரக் கூந்தலோடு தலையைப் பிடித்துக் கொண்டு யோசித்தாள். கண்களில் கண்ணீர் மட்டும்மே கசிந்தது, அவளாகத் தேடிய வாழ்க்கை தானே இது என்று கண்களை மூடி, முன் தினம் இரவில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள்.
"ராஜேஷ், பிளீஸ் அடிக்காதிங்க வலிக்குது" என்று அவன் கைகளால் அவள் முதுகில் அடித்தது, பிரம்பால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு.
அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளை கண்களால் முறைத்தான். அவனைத் தள்ளி விட முயச்சி செய்தும், அவனின் திடமான உடலை சிறிது கூட அசைக்க முடியவில்லை, அவளால். அவள் படுக்கையில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்ய, அவள் கையை பின்னாடி மடித்து அவனின் தடியான கைகளால் அழுத்திப் பிடித்து அவளைத் தடுத்தான்.
"நான் உங்க கிட்ட பேசுனது தான், நான் பன்னத் தப்பு" என்று அவனிடம் கத்தி விற்று அவள் கைகளை அவனிடம் இருந்து விடுவித்தாள். அவன் அவள் கைகளைப் பிடித்திருந்த இடம், காட்சிய கம்பினால் சூடு வாய்தார் போல் வலித்தது, அவன் கரங்கள் அவ்வளவு வலிமையுடன் தெரிந்தது அவளுக்கு.
"நான் மெதுவாகத் தான் அடித்தேன், வலித்திருந்தால் ரொம்ப சாரி" என்று ஒன்றும் அறியாத குழந்தைப் போல் கூறினான் ராஜேஷ்.
அவன் கூறிய எதுவும் இவளுக்கு புரிந்தார் போல் இல்லை. சிறிது நேரம் இவர்கள் இடத்து, வாக்குவாதம் இன்றி அமைதி நிலவியது. அவளின் மொத்த ஆற்றலையும் இழந்துவிட, யாரோ இவள் முதுகை தட்டிக் கொடுத்தார் போல் இருந்ததால் அப்படியே மெத்தையில் தூங்கி விட்டாள். அவனும் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தான்.