போ என் காதலே! போ!
விலக இயலாமல் தவிக்கிறேன்
நீ ஏனும் விட்டு செல்..உன்னை மறக்க நினைக்கும் மனம்
உனை தவிர வேர் எதையும் நினைக்க மறுக்கிறது.அன்று காதலை வெறுத்தேன்,
காதலிக்க மனம் இல்லாமல்..
இன்று மீண்டும் வெறுக்கிறேன்
காதலித்த நீ இல்லாமல்...கண்களில் வழியும் நீர் துளிகளாய்,
உன் நினைவுகளை கரைத்தேன்
கண்ணீர் வற்றியது, நினைவுகள் வற்றவில்லை..எனது அருகில் நீ இருந்தும்
எனதாய் நீ இல்லை..
வெளியில் போலி புன்னகையுடன்,
வலியில் அழுது புலம்பிய,
என் இதயம் சொன்னது-
"போ என் காதலே! போ!
என்னை கொன்றுவிட்டு போ!"