கார்த்தியின் ரிசல்ட் வந்தது.. 1185 மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் கார்த்தி. கட்ஆப் மார்க்கும் 200 வந்திருந்தது.
மெடிக்கல் சீட் ஈசியா கிடைச்சிடும்.. என மித்ராவும் சந்தோஷமாக இருந்தாள்.
"அக்கா.. எதாவது ஸ்வீட் செய்றீயா.."என கார்த்தி கேட்டான்.
"என்ன ஸ்வீட் வேணும் சொல்லு.. அதையே செஞ்சிடுவோம்.."என மித்ரா சொன்னாள்.
"ஆங்.. மித்ரா குலோப்ஜாமுன் செய்.."என்றாள் சாரு.
"ஓகே வா.."என மித்ரா கார்த்தியிடம் கேட்க.. கார்த்தியும் சரியென தலையசைத்தான்.
மித்ரா குலோப்ஜாமுன் செய்து விட்டு கார்த்திக்கும் சாருவுக்கும் கொடுத்தாள்.
ஆதியும் அப்போது வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வர.. அவனை அழைத்தாள் மித்ரா.
"கார்த்தி.. இந்தா நீயே ஸ்வீட் கொடு.."என மித்ரா கார்த்தியிடம் நீட்டினாள்.
"என்ன திடீர்னு ஸ்வீட் லாம்.."என ஆதி கேட்டான்.
"எனக்கு ரிசல்ட் வந்திருக்கு.."என கார்த்தி தன் மார்க்கை சொன்னான்.
"ஹே.. congrats.."என ஆதி வாழ்த்தினான்.
அப்போது கார்த்தி.. ஆதியின் சட்டைப்பையில் இருந்த பேனாவை கவனித்தான்.
"உங்க penஐ காமிங்க.."என்றான் கார்த்தி ஆதியிடம்.
ஆதியும் தன் பேனாவை எடுத்து நீட்டினான்.
அதை பார்த்த கார்த்தி.. "அக்கா.. இங்க பாரு.. நீ எனக்கு gift பண்ண அதே மாதிரி pen.."என கார்த்தி மித்ராவிடம் சொன்னான்.
அந்த பேனாவைக் கண்டதும் மித்ராவும் கார்த்தியிடம் தலையசைத்தாள்.
கார்த்தி.. ஆதியிடம்.. "இதே மாதிரி pen தான் அக்கா எனக்கு gift பண்ணாங்க.. இங்க பாருங்க.."என தன் பேனாவையும் நீட்டி.. சொல்லிக் கொண்டிருந்தான்.
கார்த்தியின் வார்த்தைகள் எதுவும் ஆதி மித்ரா இருவரின் காதிலும் விழவில்லை.
மித்ராவுக்கு அந்த பேனாவை வாங்கச் சென்ற போது.. ஆதியை முதன் முதலாக சந்தித்தது நினைவுக்கு வந்தது. ஆதிக்கும் அது நினைவில் இருக்கிறது என்பதை.. அவன் பார்வையில் மித்ரா உணர்ந்தாள்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..