வழமைப்போல காலையில் ஆபிஸ் சென்றான் எப்போதும் போன்று நண்பர்களோடு பேசிக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான் ப்ரியாவோடு எப்படி பேசுவது என்று.
திடிரென ப்ரியா திவாவின் அருகில் வந்து ப்ரியா : "திவா என்னட கம்பியூட்டர்ல என்னவோ எரர் மெசேஜ் வருது என்னனு பாக்குறிங்களா?" திவாவுக்கோ பேரதிர்ச்சி இது கனவா? நனவா? என்று ஒரு கணம் அமைதியானான் மீண்டும் ப்ரியா "திவா... திவா..." என்று அழைக்கவும் சுய நினைவுக்கு வந்தான்.
திவா : "சொல்லுங்க" ப்ரியா : '' அதுதான் சொன்னனே" திவா : "சொன்னிங்களா?" ப்ரியா : "அதுதான் என்னட கம்பியூட்டர்ல எரர் மெசேஜ் வருது அதுதான் வந்து பாக்க சொன்னன்" திவா : "ஓ... இந்தா வாரன்" ப்ரியா முன்னால் செல்ல இவன் பின்னே சென்றான். சிவா : "மெதுவா போடா அவள பிடிச்சி திங்க போர மாதிரி போர" திவா : "டேய் வாய மூடுரா" குமார் : "சரி போ.. போ.."
திவா அவளுடைய ஆசனத்தில் அமர்ந்து அவளுடைய கம்பியூட்டரை பார்த்து சரி செய்து கொண்டிருந்தான் ப்ரியாவும் அருகில் உட்கார்ந்திருந்தாள். அவனும் அவளுடைய கம்பியூட்டரை செய்து கொடுத்து விட்டு அவனது இடத்திற்கு சென்றான்.
சிவா : "டேய் திவா என்னடா நடந்துச்சி" குமார் : "கம்பியூட்டர் செஞ்சியா இல்ல" திவா : "டேய்" குமார் : "இல்லடா அவளேயே பார்த்துட்டு இருந்தியானு கேக்க வந்தன்" திவா : "அவளேயே பார்த்துக்கிட்டே செஞ்சன்டா" குமார் : "என்னத்த" திவா : "டேய் கம்பியூட்டரடா" இவ்வாறு பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.