அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்குமாய் சிதறிக்கிடந்தது, அதனை பார்த்த ராஜா இங்கே என்ன நடந்திருக்கும் என குழம்பினான், பின் கதவை தாழிட திரும்பினான், கதவில் அச்சிறுவனின் உருவம் சாய்ந்து நின்றிருக்க, ராஜாவிற்கு பயத்தில் கை, கால் நடுங்கியது, வேகமாக குளியலரை நோக்கி ஓடி கதவை தாழிட்டுக்கொண்டான்.
சற்று நேரத்தில், கதவை தட்டும் சப்தம் கேட்டது, ராஜாவின் கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. "ராஜா உள்ள என்ன பண்ற இவ்வளவு நேரம்??, சீக்கிரம் வா வெளிய " என குரல் கேட்க, அது ராணி தான் என அறிந்துக்கொண்டான்.
சட்டென கதவை திறந்தவன், ராணியின் கையை பிடித்து வேகமாக அவளை இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
"ஏன்டா இப்படி இழுத்துட்டு போற, என்ன பிரச்சனை " என ராணி பயத்தோடு அவனை பார்த்து கேட்க, ராணியின் பயத்தை உணர்ந்தவன் அவளிடம் நடந்ததை கூறாமல், அவளின் முகத்தைப் பார்த்து கண்ணடித்தான்.
"லூசு, என்ன பிரச்சனை அதை சொல்லு முதல்ல" என ராணி கேட்க, அவளை நெருங்கியவன் அவளின் முகத்தை தன் இரு கரங்களால் பிடித்தான், பின் அவள் இதழோடு தன் இதழ் பதித்தான்.
வெட்கத்தில் அவனை தள்ளி விட்டு ராணி ஓட, அவளை அழைத்தபடி அவளின் பின்னே இவனும் ஓடினான்.
இதனை பார்த்த ராதிகா, ராணியின் கல்லூரி படிப்பு முடிந்ததும் இவர்களின் காதலை இருவீட்டிலும் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மனதில் எண்ணினாள்.
ராணி ஓடிச்சென்று ஹோட்டல் பின்புரம் இருந்த ஒரு சிறு பாறையில் ஏறி உச்சியில் நிற்க, ராஜாவும் ஏற முயற்சித்தான், அச்சிறுவனின் உருவம் அவனின் கால்களை தட்டிவிட, சற்று தடுமாறியவன் சமாளித்து கீழே அமர்ந்துக்கொண்டான்.
"என்ன ராஜா கால் வலிக்குதா?? இந்த சின்ன பாறை மேல உன்னால ஏற முடியல?? " என ராணி பாறை மேலிருந்து நக்கலடிக்க, கடுப்பேறினான் ராஜா.
"பேசுவ நீ பேசுவ... உன் பின்னால வந்தாலே அந்த குட்டி பிசாசு என்ன டார்ச்சர் பண்ணுது, நீ என்னனா இந்த சின்ன பாறைய ஏற முடியலையானு கிண்டல் பண்ற எல்லாம் என் நேரம்" என தன் மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தான்.
YOU ARE READING
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)
Mystery / Thrillerகாடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!