ஒற்றை கள்வன்

Start from the beginning
                                    

அவன் சொல்லி முடிக்கவும், படைஎங்கும் சிரிப்பு சத்தம் எழத் தொடங்கியது. பூபதியும் நகைத்து விட்டு தொடர்ந்தான்,

" கள்வனே, நீ இப்போதே உன் வேலை, எம் மன்னனின் காலடியில் வைத்து , மண்டியிட்டால், உன் உயிருடன் , நீ முன் சொன்ன அனைத்து உயிர்களும் பிழைக்கும். உனக்கு கண் தெரியுமென்று நினைக்கிறன். உன் முன் உள்ள படைகளை பார். இத்தேரின் மேல் பறக்கும் கொடியிலுள்ள சிங்கம், காட்டின் மன்னன். அதை சின்னமாக கொண்டு ஆண்டாண்டு காலமாய் ஆட்சி புரியும் , எங்கள் இளவரசன் இந்திராதித்தர், இந்நாட்டின் மன்னன். அவர் பாதம் பணிந்து உன் பாவம் கழுவிக் கொள்.."

பூபதியின் இந்த மிரட்டலை கேட்டு சற்றும் அசராதவனாய் கட்டியங்கன் பதிலுரைத்தான்,

" மருதபுரியாரே.. உமக்கும் கண் தெரியுமென நம்புகிறேன் , சற்று பாரும். இது சோலைகள் நிறைந்த காடும் அல்ல, கோபுரங்கள் நிறைந்த நாடும் அல்ல, இந்த பாலையில் எங்களுக்கு எவரும் மன்னனும் அல்ல. "

பூபதி சினம் கொண்டு தன் வாளெடுக்க, இளவரசன் அவனை தடுத்தான். நிலையை கண்டு சுதாரித்த வெட்டூர் காளையன் கார்கோடன் இளவரசனிடம், " மன்னா.. என்ன பேச விடுங்கள். நான் அவனிடம் தனியாக பேசி அவன் மனதை மாற்றுகிறேன்."

" கள்வர்கள் தனி சதி செய்ய நாங்களே கூடம் அமைத்து தர வேண்டுமோ.. " என்றான் பூபதி இடைமறித்து.

" நான் தான் எல்லாமே சொல்லி விட்டேனே, அவர்கள் இருப்பிடம் செல்லும் வழியை காட்டியது போதாமல் உங்களுடன் வேறு வருகிறேனே.. என்னை நம்ப மாட்டீர்களா..? "

பூபதி ஏதோ சொல்ல முன்வர, இந்திராதித்தன் முந்திக் கொண்டான், " நம்ப மாட்டீர்களா பிரபு.. என்று அழைக்க வேண்டும். நீ இன்னும் கள்வனல்ல, நாட்டின் பிரஜை நெறி தெரிந்து பேசப் பழகு.. நீ சென்று பேசலாம்.. "

" மன்னா.. தனியாக பேச வேண்டாம் இங்கிருந்த படியே நம் எல்லார் முன்னிலையில் பேச சொல்லுங்கள்.. இது என் தாழ்வான கருத்து.. " என்றான் பூபதி., அவன் இன்னும் எந்த கள்வனையும் நம்ப தயாராக இல்லை.

கொற்றவைWhere stories live. Discover now