இளவரசன்

Start from the beginning
                                    

மூன்று புறமும் எதிரிகள் தாக்கா வண்ணம் ரதம் மூடப்பட்டு இருந்தது, இளவரசனை முன் நின்று சாய்க்கும் வீரன் இல்லாத படியால் முன் புறம் மட்டும் திறந்திருந்தது. சந்திரன் மானுடனாய் அவதரித்தால் இவனை போன்றுதான் இருப்பான் என சொல்லலாம், அத்தனை அழகு இளவரசன் இந்திராதித்தன், அவன் சிகை தோள்களில் பரவி இருக்கும் நெற்றியில் திலகம், செவ்வானில் சூரியன் போல அவன் தேகத்தின் நிறத்துக்கு எடுப்பாய் அமைந்திருக்கும். வாள் போன்ற நெடிய புருவங்களின் கீழ் கருநீல கண்கள் , மங்கையரை மயக்கிடும், பகைவர்களை எரித்திடும். அவன் நண்பனும் தளபதியுமான பூபதி ஒருபுறம், அவன் அரணாய் அமைந்திட , நிமிர்ந்த நெஞ்சுடன் இன்னுமொரு யுத்தத்திற்கு இல்லை வெற்றிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான். இப்பெரும் வீரர்களின் மத்தியில் அவர்களுக்கு சற்றும் சம்பந்தமிலாத ஒரு சிறுவனும் வந்துகொண்டிருந்தான், அவன் தேரோட்டியின் உதவியாளன், குதிரைகளுக்கு கொள்ளு வைப்பதும் உணவு சமைப்பதுமே அவன் வேலை. இளவரசனுடன் இவன் கிளம்பி இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. பல போர்களை கடந்து விட்டான், ஆனால் எந்த போரையும் பார்த்ததில்லை. போர் சங்கு ஊதியதும் ரதத்தின் பின்புறமுள்ள உணவு கொண்டு செல்லும் வண்டிக்குள் ஒளிந்துக்கொள்வான். வெளிவரும்போது போர் முடிந்து இளவரசன் தோலில் வாகையுடன் திருமால் போல நின்று கொண்டிருப்பான். இதுவே வாடிக்கை. இந்த பயணங்களில் இவனது ஒரே பொழுது போக்கு இளவரசன் தளபதியுடன் பேசுவதை ஒட்டு கேட்பது தான். இன்றும் அப்படிபட்ட ஒரு உரையாடல் நிகழ, காதை தீட்டியவாறு அமர்ந்திருந்தான் அவன்.

" இளவரசே.. கள்வன் சொன்ன பாதையில் வெகு தூரம் வந்தாயிற்று இன்னும் ஒரு உயிரை கூட காண முடியவில்லையே .. கள்வன் ஏதும் சூழ்ச்சி செய்கிறானா.. அவனை நம்பலாமா.." என்றான் தளபதி.

சூழ்ச்சி செய்யும் அளவு இந்த கள்வர்கள் புத்தி சாலிகள் இல்லை பூபதி.. கடந்த யுத்தத்தில் தான் பார்திருபீரே.."

" ஆமாம் ஆமாம், செம்மறி ஆட்டு கூட்டங்களாய் நாம் விரித்த வலையில் வந்து விழுந்தனர் மூடர்கள். இருபுறமெங்கும் நம் குதிரை வீரர்கள் சோளக் கட்டைகளை கொயவதை போல் அவர்களை கொய்து விட்டனர். " என்றதும் இருவரும் சிரித்தனர்.

கொற்றவைWhere stories live. Discover now