எப்படி நான் கௌசிக்க விட்டுக் கொடுக்க முடியும்? கௌசிக் கே தன்னை மறுத்த போதிலும் அவனை தன்னால் மறக்க முடியாமல் , விட்டுக் கொடுக்க முடியாமல் இங்கு வரை வந்துவிட்டாளே... இதற்கு மேலும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது... கௌசிக் என்னுடையவன்... உண்மை தானே விநாயகா????
என்று எந்த முடிவையும் எடுக்க முடியாமல் முகத்தில் தண்ணீரை வாரி அடித்துக் கழுவினாள்....
அக்கா...
அண்ணி...
தான்வியும், ஷிவாவும் பதற்றத்தோடு அங்கு வந்து சேர்ந்தனர்.
அக்கா... என்னக்கா... யாரோ என்னமோ சொன்னதுக்காக அழலாமா?.. மாமா க்கு உன்னை தான் அக்கா பிடிக்கும், சும்மா அந்த பொண்ணு ப்ரெண்ட் ஆ கூட பழகி இருக்கலாம் இல்லையா???
ஆமா அண்ணி , நீங்க எதும் ஃபீல் பண்ணாதீங்க... பார்த்துக்கலாம்...
ச்சே ச்சே... நான் எதும் நினைக்கலை டா... அங்க சாப்பிட்டது எதும் சேரலை போல ... Vomit வர்ற மாதிரி இருந்தது... அதான் ரெஸ்ட் ரூம் வந்தேன்... அவ்ளோ தான்...
மீராவே கொஞ்சம் தெளிந்தவாளாய் இருக்கும் போது , தாங்கள் எதும் இன்னும் பேசி குழப்ப வேண்டாம் என்ற முடிவோடு இரு பெண்களும் மீரா வை கட்டிக் கொண்டனர்.
சரி சரி வாங்க... போலாம், DJ ல நம்மலும் கலந்துக்கலாம், என்ற படியே தான்வி மீராவை இழுத்துக் கொண்டு செல்ல, ஷிவா சிரித்தபடி பின் தொடர்ந்தாள்.
ஓர் ஆங்கில பாடல் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருக்க, அதன் கூடவே அங்கே இருந்தவர்கள் அந்த வரிகளை பாடிக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தனர்.
பேசியபடியே அங்கே வந்து சேர்ந்த தான்வி ஒரு இடத்தை பார்த்ததும் அதிர்ந்து நின்றாள்...
பின்னால் வந்த இருவரும் , என்னாயிற்று இவளுக்கு என்றவாறு அவள் பார்த்த திசையை பார்க்க... அங்கே விஷ்ணு ஒரு புன்னகையோடு இவர்களை பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான்.
விஷ்ணு... மீரா முணுமுணுத்தாள்...
விஷ்ணு வா... தான்வி சொன்ன விஷ்ணு வா அக்கா... அவரா இவர்??
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
அத்தியாயம் 44
Start from the beginning