அத்தியாயம் 37

Start from the beginning
                                    

இரவு சாப்பிட்டு விட்டு மீரா வுடன் தான்வியும் மீராவின் அறைக்கு வந்துவிட்டாள். சிவா சிறிது நேரம் காலாற நடந்துட்டு வரேன் என்றவாறு கீழே லானில் நடக்க போய்விட்டாள்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த தான்விக்கு அன்று முழுதும் தன் தமையனுடன் பேசவில்லை என்பது நியாபகம் வர அவனை அழைத்தாள்.

நேரம் மாறுமே தான்வி ...இப்போ அவங்களுக்கு நைட் 2 மணிக்கு மேல இருக்குமே என்று மீரா சொல்லியும்..

ஆமா அண்ணி, ஆனா அவன் கூட பேசாம என்னால தூங்க முடியாதே என்ற படி அவனது ஃபோன் க்கு கால் பண்ணினாள்.

அதை அவன் அட்டென்ட் செய்தவுடன் வீடியோ கால் பண்ணி பேச ஆரம்பித்தனர் . மீரா வும் அகிலனுடன் சம்பிரதாயமாக பேசிவிட்டு நகர்ந்து கொள்ள , அகி யும் , தான்வி யும் பேசிக் கொண்டிருந்தனர்.

தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் , அதன் காரணமாய் சிறு எரிச்சலை கூட தன் சின்ன தங்கையிடம் காட்டாது பேசிக் கொண்டிருக்கும் அகிலனையும் மீராக்கு பிடித்தது. அவர்கள் மூவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு புரிந்தது.

அரைக் கதவு தட்டப்பட மீரா போய் திறந்தாள். அங்கே வேலை செய்யும் பெண்மணி நின்றிருந்தார்.

தான்வி பாப்பா வ பாட்டி வர சொன்னாங்க... Book ஏதோ காணமாம் ...

அச்சோ நான் அத எங்க வெச்சேன்னு தெரியலையே... சரி சித்ரா அக்கா .. நீங்க போய் தூங்குங்க நான் போய் பார்க்கறேன் என்று தான்வி சொல்லி விட சித்ரா அங்கே இருந்து நகர்ந்தார்.

அகி line லையே இருடா... நான் போய் பாட்டிக்கு book எடுத்துக் கொடுத்திட்டு டக்குண்ணு வந்தரேன்.

சரி ...

வரதுக்குள்ள தூங்கிடாத டா..

தூங்க மாட்டேன் கொரங்கே போ மொதல்ல ...

என்று தான்வியை அனுப்பி வைக்க...

இரு தான்வி, நானும் வர்றேன் என்று மீரா வும் அவளுடன் நகர்ந்தாள். ரூமில் இருந்தால் அகிலனோடு பேச வேண்டி வரும் என்பதே அவள் அங்கிருந்து நகர்ந்த காரணம், இதை அகி யும் உணர புன்னகையோடு கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான் வீடியோ காலில் இருந்து கொண்டே.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now