அத்தியாயம் 30

Start from the beginning
                                    

அதனால் என்ன கண்ணா...

அதான் உங்களை நாளைக்கு நேர்ல வந்து வீட்டுக்கு கூட்டிட்டு  வரணும்னு சொல்லிட்டு இருந்தாங்க...

கண்டிப்பா வரோம் கண்ணா.... என்று அவன் தலையை தடவிக் கொடுத்தார்.

விஷ்ணு வின் பார்வை இப்போது தான்வியின் பக்கம் திரும்பியது..

ஹாய்... தான்வி... எப்டி இருக்க?

ம்ம் ... நல்லா இருக்கேன் ... என்றவாறு அவனை பார்த்தாள்...

பாட்டி சொன்னது சரி தான் .... அப்பொழுதெல்லாம் ஒட்டடை குட்சியாய் இருந்தவன்... இன்று ஆணழகனாக இருக்கிறான்... அவனது ஈற்கும் விழிகளும், புன்னகையும் இன்னும் வசீகரம் ஆனதாய் உணர்ந்தாள்..

அவளது அளவிடும் பார்வை கண்டவன் வெக்கம் கொண்டு புன்னகைக்க ... அதை கண்ட அவளுக்கு சிரிப்பு வந்தது...

அவர்களது இந்நிலை கெடுக்கும் விதமாய் ,

லக் கேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்ட தானே தான்வி? என்ற கௌசிக் கின் குரல் அவளை நோக்கி கேட்டது..

எஸ் அண்ணா... எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்..

ம்ம்... போலாமா ?

சரி... என்ற அவள் பதிலோடு அனைவரும்  விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர் ..

ஒரு வாரம் ஆச்சு கௌசி  உன்னை பார்த்து... அன்னிக்கு கிஸ் பண்ண போது தான் பார்த்துகிட்டது... அதுக்கப்பறம் பார்க்கவே முடியலை .. ச்ச்சே...

எப்போ ஃபோன் பண்ணினாலும்... கொஞ்சம் நேரம் பேசிட்டு வேலை இருக்கு மீரா ன்னு வைத்து விடுகிறாய்...

ஏன் இப்படி பண்ற என்று கண்ணாடி முன்னால் நின்று கௌசிக்கிடம் பேசுவதாக  கற்பனையில் அவனை திட்டிக் கொண்டிருந்தாள் மீரா.

ஒரு வேளை அவனுக்கு உன்னை பிடிக்காம ,உன்னை அவாய்ட் பன்றானோ என்னமோ? என்று மனம் அவளை பயமுறுத்த...

அவன் கண்ணுல அன்னிக்கு எவ்ளோ லவ் இருந்துச்சு பார்த்த இல்ல... அதை பார்த்தும் உனக்கு இப்படி சந்தேகம் வரலாமா? அது மட்டும் இல்லாம... அவன் முன்னாடியே ரொம்ப பிஸி ஆக தானே இருந்தான்...அந்த வேலை இன்னும் முடியாமல் இருந்திருக்கலாம்... அதான் இப்படி ... அதனால் நீ பேசாம இரு...என்று தன்னிடம் வாயடிய மனதை கொட்டு வைத்து அடக்கினாள்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now