அத்தியாயம் 26

Start from the beginning
                                    

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவர்கள் வெளியே தப்பிக்க பார்க்க , ராஜூ வும் வீர் ரும் அவர்களை பிடித்து வெளுக்க ஆரம்பித்தனர்.

அதற்குள் அந்த அறையின் வாசலை நெருங்கி இருந்த கௌசிக் கின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

உள்ளே நுழைந்தான் கண்டது கையையும் காலையும் கட்டிலோடு கட்டப்பட்டு அதில் துடித்துக் கொண்டிருந்த மீராவை தான்...

மீரா... என்ற வெளிவாரா குரலோடு அவளை நெருங்கவும் , அவனைக் கண்ட அவளது கண்கள்  முதலில் பயத்திலும், பின்பு சந்தோஷத்திலும் விரிந்தது..
அவளது துடிப்பும் அடங்கி கொஞ்சம் சாந்தமானாள் .

அவளது கை கட்டையும் கால் கட்டையும் அவன் வேகமாய் அவிழ்த்து விட,

அடுத்த நொடி கட்டிலில் இருந்து இறங்கி அவனை இறுக அணைத்து கொண்டாள்...

அவளது உடலில் நடுக்கத்தை கண்டவன் ...

ஷ் ஷ...மீரா ஒன்னும் இல்லை... இங்க பாரு ஒன்னும் இல்லை... நான் வந்துட்டேன் இல்லையா... உட்காரு என்று கட்டிலில் அவளை அமரவைத்து.. அவளது வாயில் இருந்த கட்டை அவிழ்த்து விட்டு முகத்தில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டான்..

அப்பொழுது தான் தெரிந்தது அவளது வீங்கிய முகமும், அதில் தெரிந்த கைத் தடமும்... அதை கண்டவனது கோபம் எல்லை மீற... கைமுட்டியை மூடி அதை அடக்கியவன் அவளது உடலை ஆராய கைகளிலும் கால்களிலும் கயிற்றினால் கட்டப்பட்டு இருந்த இடங்கள் கந்தி கிடக்க, அவள் இழுத்ததால் அங்கங்கே தோல் உரிந்திருந்தது, சற்று நேரம் இருந்திருந்தால் இரத்தம் வந்திருக்கும்..

அந்த நொடிகளில் அவளது சுய உணர்வு திரும்பியிருக்க , அவளது கைகள் அவளது கிழிந்த உடையை சரி பண்ண முனைந்தது...

தோள்பட்டை கை இடுப்பு என்று அந்த சுடிதாரின் நிறைய பக்கங்கள் கிழிந்து அந்த வெறினாய்களின் வெறிச்செயலை வெளிப்படுத்தியது...

தான் போட்டிருந்த ட்டிஷர்ட் டை கழட்டி..

இத போட்டுக்கோ...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now