ம்ம்...
சரி கிளம்பு...இல்லைனா வேலையும் போய்டும்... என்று மனசாட்சி அவளை கிளப்பி விட்டது..
ஆபீஸ் சென்றவனுக்கு நினைப்பு அனைத்தும் மீரா வின் மீதே இருந்தது..
என்னோட முட்டாள் தனத்தால் அவளை வருத்தி விட்டேனே... என்று தன்னை தானே நூறு முறைக்கு மேல் கடிந்து கொண்டான்...
மதியம் அவனது அழைப்பேசியில் மீரா கூப்பிட்டாள்..
மீரா... அரக்க பரக்க எடுத்து காதில் வைத்தான்...
ஹாய் கௌசி...
ஹாய்,.
சாப்டாச்சா?
இல்லை ..இனிதான்.. நீ?
சாப்பிடணும்... ஆனா எனக்கு தூக்கம் தான் வருது..
இந்நேரத்தில் உனக்கு என்ன தூக்கம்?
அதுவா... மீட்டிங் வைத்துவிட்டார்கள்.. உனக்கு தான் தெரியுமே மீட்டிங் னா எனக்கு தூக்கம் வந்திடும்னு..
உன்னை எல்லாம்..
ஹி ஹி ஹி..
அதான் உன்னிடம் பேசினால் தூக்கம் போய்விடுமென்று கால் பண்ணினேன்..
அது சரி... உணவு இடைவேளை முடிய போகுது... நீ வேற மெதுவா சாப்பிடுவாய் ... சோ ..சீக்கிரம் போய் சாப்பிடு...
ஹ்ம்ம்...
தூங்கமா எழுந்திரு... கோ...
சரி ஓகே... பை... சாயந்திரம் பார்க்கலாம்...
ஹ்ம்ம்....பை...
அழைப்பை துண்டித்த இருவரும் நீண்ட ஒரு பெருமூச்சை வெளியிட்டனர்..
.
.
.
.
.வீடியோ காலில் இருந்த அகிலன் பாட்டியை கேள்வியுடன் பார்த்தான்...
அப்படினா நீங்க அந்த பெண்ணை எனக்கு பேசி முடிக்க வரேன்னு சொல்லி இருக்கீங்களா?
அம்பிகா அமைதியாகவே இருந்தார்..
பாட்டி ... ஏதேனும் சொல்லுங்க... அண்ணா க்கு பார்த்த பொண்ணு அவங்க... கடைசில இப்படி சொன்னா என்ன அர்த்தம்?
அட என்னமோ இப்பையே கல்யாணம் பேசி முடுசிட்ட மாதிரி ஏன் குதிக்கிறாய் ..?
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
רומנטיקהஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
அத்தியாயம் 23
Start from the beginning