அது சரி.. என்று விட்டு சமையல் அறையில் பானு நுழைந்தாள்..
பானு அக்கா , ஆன்டி எப்போ வருவாங்க...?
தெரியலை டா.. சீக்கிரம் வந்தரேன்னு சொல்லிட்டு போனாங்க...
இன்று என்ன விஷேசம் காலைலேயே கோவிலுக்கு போயிருக்காங்க?
இன்னிக்கு ஆவணி அவிட்டம் , என் பேர்ல பூஜைக்கு கொடுத்திருக்காங்க .. அதான் நேரமே கோவிலுக்கு போய்ட்டாங்க ..
ஹ்ம்ம்... Uncle எப்போ வருவாங்க?
காரியம் இன்னிக்கு தான்... அதனால் இன்னிக்கு சாயந்திரம் வந்திருவாங்கன்னு நினைக்கறேன்
கரூர் தானே அக்கா...
ஆமா..
ஹ்ம்ம். .. என்று விட்டு அங்கிருந்த புக்கை எடுத்து மீரா புரட்டிக் கொண்டிருக்க... பானு சமையல் கட்டில் அடுப்பில் பாலை வைத்திருந்தாள்..
இன்னும் டெலிவரிக்கு ஒரு வாரம் இருக்கின்ற காரணத்தினால் தான் பானுவை தைரியமாக வீட்டில் விட்டு விட்டு லலிதா கோவில் சென்றுவிட, ரகுராம் தனது சொந்தகாரர் ஒருவர் இறப்பிற்கு சென்றிருந்தார் .
ஆனால் பானுவிர்க்கோ காலையில் இருந்து அப்போ அப்போ மெலிதாக வந்து கொண்டிருந்த வலி, இப்போது அதிகம் ஆகியது ..
நிற்க முடியாமல் போக அடுப்பை அனைத்தவள் அப்படியே கீழே அமர்ந்தாள்...
ம்ம்... மீ... ரா...
பானுவின் அந்த வலி நிறைந்த குரல் கேட்டு அடித்துபிடித்து மீரா சமையல் அறையில் நுழைய... அங்கே பானு வயிறை பிடித்துகொண்டு கீழே துடித்துக்கொண்டு இருந்தாள்
அக்.. கா.. என்ன...ஆச்சு ....
மீரா ..... வ... லி.. ரொம்ப..... இருக்கு... அம்மாவை கூப்பிடு..
இதோ ... கால் பன்றேன் அக்கா...
அவளது மொபைல் எடுத்து லலிதாவிர்க்கு கால் பண்ண... நாட்ரீச்சபில் என்றே ஒலித்தது...
அக்கா கால் not reachable அக்கா...
அதற்கு பதில் அளிக்க கூட முடியாத நிலையில் பானு துடித்தாள்..
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
அத்தியாயம் 20
Start from the beginning