அமரன் அவள் கையில் ஒரு பெட்டியை தர.......... அந்த பெட்டியை திறந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர் கசிந்தப்படி
சித்ரா - நான் அமரனின் சித்ரா அம்பிகையாக இருக்கும்பொழுது இந்த தாலி சங்கிலியை எனக்குத் தர உனக்கு மனசு வரலையா அமரா.... இப்போ நான் இந்த நிலைமையில் இருக்கும் பொழுது இதை தரியே என்னால எப்படி ஏத்துக்க முடியும்...
அமரன் - என் அப்பா வை விட்டுட்டு எங்க அம்மா பிரிந்து வந்ததுக்கு அப்புறம் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக இந்த தாலி சங்கிலியை அடமானம் வச்சு எங்க அம்மா காசு வாங்கி எனக்காக செலவு பண்ணாங்க.......ஆனா அவங்க இறந்ததுக்கு அப்புறம் இந்த தாலி சங்கிலியை மூட்டி நான் தான் அவங்க ஞாபகமா வச்சு இருந்தேன்.. எத்தனையோ நாள் உன்கிட்ட இத கொடுக்கணும்னு நான் ஆசைப்பட்டு இருக்கேன் சித்ரா ......ஆனா கடைசி வரை அத கொடுக்க முடியாமல் போயிடுது.... இப்போ நான் கொடுக்கும் பொழுது கூட நீ இதை ஏத்துக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும் சித்ரா .....ஆனா ஒருவேளை நான் இதை கொடுத்தால் நீ அதை ஏத்துக்கிட்டு இருந்திருப்பியோ என்ற ஒரு எண்ணம் எனக்குள்ள வந்துடக்கூடாது இல்ல.......அதனால தான் கொடுத்தேன் ...பரவால்ல சித்ரா... நீ தான் சொல்லிட்டியே..... உன் மனசுல எனக்கு இனி இடம் இல்லன்னு ...நீ இந்த சங்கிலியை கழுத்துல எல்லாம் போட்டுக்க வேணாம்....என் நினைவா இத வச்சுக்கலாம்ல
சித்ரா - வேண்டாம் அமரா....இது உன் பொண்டாட்டிக்கு சேர வேண்டியது.. நீ அவங்களுக்கே இது கொடுத்திடு..
அமரன் - ஹ்ம்.......ஏன் சித்ரா உனக்கு நம்பிக்கை இருக்கா..
சித்ரா - என்ன.
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.