47 பணம் பத்தும் செய்யும்

Start from the beginning
                                    

"அதோட நிறுத்தினானா உன் தம்பி? என்னமோ இந்த உலகத்துலேயே அவளை விட்டா வேற பொண்ணே இல்ல அப்படிங்கிற மாதிரி, அவளை தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடுறான். அப்படி அவன் அவகிட்ட என்னத்த பார்த்துட்டான்னு இப்படி அவளுக்காக சாகுறான்னு தெரியல..." என்றான் சரவணன் எரிச்சலுடன்.

"இங்க பாருங்க, நடந்தது எதையும் நம்மால மாத்த முடியாது. அடுத்து என்ன செய்யறதுன்னு சொல்லுங்க"

"இப்ப வந்து  என்ன செய்றதுன்னு என்னை கேளு... அவளை அடிச்சு உட்கார வைக்க நம்ம எடுத்த எல்லா முயற்சியும் வீணாப் போச்சு. உன்னோட தம்பி, அவளை கவசமா இருந்து பாதுகாக்குறான். உன்னோட தம்பி ரொம்ப பொசசிவானவன் என்கிறதால, அவள் வேற ஒருத்தன் கூட இருக்கிற போட்டோவை பார்த்தா அவனோட வாழ்க்கையிலிருந்து தூக்கி ஏறிஞ்சிடுவான்னு சொல்லி, ஒரு போட்டோவையும் மார்ஃபிங் பண்ணி அனுப்பி வச்ச... ஆனா அவன், அவளை கடவுள் மாதிரி நம்பி, அன்னைக்கே அந்த விஷயத்தை ஒடச்சி, ஒன்னும் இல்லாம ஆக்கிட்டான். கல்கத்தாவிலிருந்து ஒரு ரவுடியை வரவச்சி அவளை கிட்னாப் பண்றதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணோம். அப்படி பண்ணா, அவ தன்னுடைய நம்பிக்கையை மொத்தமா இழுந்து அறைக்குள்ள முடங்கிடுவான்னு நினைச்சோம். ஆனா, திருக்கழுகுன்றம் கழுகு மாதிரி உன் தம்பிக்கு மூக்கு வேர்த்து எப்படி மோப்பம் பிடிச்சு கரெக்டா அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்னு புரியல. இந்த நிலைமை நீடிச்சிதுன்னு வச்சுக்கோ, நம்ம நடுத்தெருவில தான் நிக்கணும். அதுவும், ஆதிக்கு குழந்தை பிறந்துட்டா, நம்மளோட கதி அதோ கதி தான்."

"அப்படி நிச்சயம் நடக்காது. நான் நடக்க விடமாட்டேன். இந்த தடவை நான் அடிக்கிற அடி, அவ தலையில் இறங்க போகுது."

பயத்தில் வாயைப் பொத்திக் கொண்டாள் கமலி. இவர்கள் இப்படிப்பட்டவர்களா? ஆதித்யா இந்த திருமண பந்தத்தில் மனமுவந்து கலக்க மாட்டான் என்ற எண்ணத்தில் தான் தன்னை அவனுக்கு திருமணம் செய்து வைத்தாளா ரேணுகா? அப்பொழுது தான் ஆதித்யாவின் வாழ்வில்  எப்பொழுதும் தனது கை ஓங்கி இருக்கும் என்ற எண்ணத்தில் இதை செய்தாளா? அந்த நொடி, கமலியின் உணர்வு எப்படி இருந்தது என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவள் கதி கலங்கிப் போனாள். யார் தான் எதிர்பார்க்க முடியும், தங்களில் ஒருவர் என்று அவள் எண்ணி இருந்தவர்கள் தான், அவர்கள் வாழ்வில் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று...? அழுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. இந்த உண்மை தெரிந்தால், ஆதித்யா சுக்கு நூறாய் உடைந்து போவான். இந்த திடீரென்ற அதிர்ச்சியால் அவள் தலை சுற்றியது. தடுமாறி விழ போனவள், தன் கையிலிருந்த தண்ணீர் ஜக்கை தவற விட்டாள்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now