34 மலர்க்கணைகள்...

Start from the beginning
                                    

"என்ன ஆச்சு, கமலி?"

தனது வாயின் மீது விரலை வைத்து,

"ஷ்ஷ்ஷ்...." என்றபடி இங்குமங்கும் ஒளிந்து கொள்ள இடம் தேடினாள், எதுவும் சொல்லாமல். அது ஆதித்யாவை மேலும் பதட்டமாக்கியது.

"கமலிலிலி...." என்று குரலேழுப்பினான் ஆதித்யா.

அவனை நோக்கி சில அடிகள் வேகமாய் எடுத்து வைத்து, அவன் வாயை பொத்தினாள் கமலி, அவர்களுக்கு இடையிலான முதல் *பேட் டச்*சை தொடங்கிவைத்து. அப்படியே அவனை பின்நோக்கி தள்ளி கொண்டு நகர்ந்து, நீச்சல் குளத்தின் மிகப்பெரிய கண்ணாடி  கதவுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலையின் பின்னால் சென்று தங்களை திரைச்சீலையினால் மறைத்துக் கொண்டாள்.

"ஷ்ஷ்... ஷாலினி என்னை தேடிக்கிட்டு இருக்கா" என்றாள் ரகசியமாக.

தன் மீது சாய்ந்து கொண்டு, தனக்கு வெகு நெருக்கமாய் நின்றிருந்த கமலியை நம்ப முடியாமல் பார்த்தான் ஆதித்யா. அப்போது அவர்கள், ஷாலினி, கமலியை அழைப்பதைக் கேட்டார்கள்.

"மாமி, நான் உங்களை சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவேன்..."

அதை கேட்ட கமலி, ஆதித்யாவின் சட்டையை இருக்கமாய் பற்றிக்கொண்டு, அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். இந்தப் பெண்ணுக்கு ஒளிந்துகொள்ள வேறு இடமா கிடைக்கவில்லை...! தன் கணவனின் கழுத்தின் இடுக்கில் அல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறாள்...!

ஆதித்யா, அடக்கி வைக்க நினைத்த பொல்லாத ஹார்மோன்கள், தங்களது வேலையை காட்ட துவங்கின. தனது மனைவியின் உயிர் வாங்கும் நெருக்கத்தை எதிர்பார்க்காத ஆதித்யா, கண்களை மூடி குத்துக் கல்லைப் போல் நின்றான். தனது மனைவியை புடவையில் பார்த்து விட முடியாதா என்ற எண்ணத்தில் தான் அவன் இங்கு வந்தான்... ஆனால், இந்த சந்தர்ப்பத்திற்காக மலர்க்கணையுடன் காத்திருந்த காமதேவன், அதை கமலியின் மீது எய்து, ஆதித்யாவின் உதவிக்கு வந்தான்.

ஆதித்யாவுக்கு வெகு நெருக்கமாய் நின்றிருந்த கமலியை, ஆதித்யாவின் மீது வீசிய வாசம் மதிமயங்க செய்தது. அந்த வாசனையை நுகர்ந்த போது, அதுவரை ஏற்படாத ஏதோ ஒரு மாற்றம், அவளுக்குள் நிகழ்ந்தது. அவன் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை நுகர்வது அவளுக்குப் புதிதல்ல என்றாலும், அதை ஆதித்யாவின் வாசத்துடன் சேர்த்து நுகர்ந்த போது அவளது சித்தம் கலங்கிப் போனது. அதை மேலும் நுகர வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. தன்னிலையை மொத்தமாய் இழந்த கமலி, அவனது கழுத்தை சுற்றி வளைத்து ஆழமாய் மூச்சை இழுத்தாள். மலர்கணைகள் பாய்ந்துவிட்டால், கமலியே ஆயினும் தன்னிலை இழந்து தானே தீர வேண்டும்...!

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now