அத்தியாயம் 22

757 23 0
                                    

அத்தியாயம் 22

இப்படியே அவர்களின் நாட்கள் கழிந்தது.. ஆதிரன் இரு நாட்களில் சென்னை சென்று விட்டான். ஆராதனாவை  கவனிக்க வேண்டும் என்று அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள் அகல்யா. ரிஷியோ ஆராதனாவேயே சுற்றிக்கொண்டு திரிந்தான்..

சென்னையில் உள்ள வேலைகளை எல்லாம் வீட்டிலிருந்தே கவனித்தான்.. தாத்தா பாட்டி இருவரும் புதிதாக கிடைத்த பேத்திகள் இருவர் உடனேயே நேரத்தைச் செலவழித்தனர் ..இப்படி அவர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் செல்ல தவித்தது என்னவோ ரிஷி மற்றும் ஆதிரன் தான். ரிஷி தன் மனைவியோடு பேச முயல அவளோ அவனை கண்டு கொள்வதே இல்லை..

  ஆதிரன் தனது மனைவியை சென்னை வா என்று அழைக்க என்று அவளோ இங்கு எல்லோருடனும் இருப்பது தான் தனக்கு பிடித்திருக்கிறது.. என்று மறுத்துவிட்டாள் . அவனும் வேறு வழியில்லாது அவளை விட்டு விட்டான்.

ரிஷியோ அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என யோசித்து யோசித்து முதலில் தன் குடும்பத்தாரிடம் பேசுவது என முடிவெடுத்தான். அதேபோல் ஒருநாள் அனைவரிடமும் பேசி தன் தவறையும் ஒத்துக்கொண்டது  மட்டும் இல்லாது ஆராதனாவை இப்போது மட்டும் அல்லாது முதலில் இருந்தே காதலித்ததை கூறி அது தனக்கு ஆதிரன் சொல்லும்வரை புரியவில்லை என்பதையும் கூறினான். அவனது குடும்பமும் எப்படியோ இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தாலே சந்தோஷம் என்ற நிலையில் சரி என்று கூறிவிட்டனர்.

   அன்று இரவு குளியலறையிலிருந்து இடையில் டவலுடன் வெளியே வந்தான் ரிஷி. அப்போது உள்ளே வந்த ஆராதனா அவன் இல்லை என்ற நினைவில் வேகமாக நடந்து வந்து குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவன் மேல் மோதி கீழே விழப்போனாள் .

அவளை தாங்கி பிடித்தவன் வேண்டுமென்றே இன்னும் இறுக்கி அணைத்தான். தான் விழவில்லை ரிஷியின் அணைப்பில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்தவள் விலக பார்க்க அப்போதுதான் உணர்ந்தால் இன்னும் அவன் அவளை அணைத்துக் கொண்டு இருப்பதை..

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now