ஆதிரன் சென்ற பிறகும் அதே நிலையில் தான் இருந்தான் ரிஷி வர்மன். அவளை இங்கே கண்டதில் இருந்து இன்று வரை யோசித்துப் பார்த்தான் அவன்.
கல்யாணத்தின் போது கூட இவளை தான் தேர்வு செய்தான். ஆதிரனின் மூலம் கல்யாணப் பேச்சை எடுத்து கல்யாணமும் பண்ணினான்.
மேலும் திருமணத்திற்கு பிறகும் அவளுடன் எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தான் என நினைத்து பார்த்தான் ஒரு கணம்.. அப்போதிருந்தே அவளிடம் எவ்வளவு அன்போடும் காதலோடும் இருந்திருக்கிறான்.. இன்னும் அவளுக்கு ஒன்று என்ற போது அவன் எப்படி எல்லாம் துடித்து போய் விட்டான். மேலும் இன்னொருவருடன் அவளை இணைத்துப் பேசுவதை கூட அவன் விரும்பவில்லை என்பது தான் உண்மை.இவை எல்லாம் காதல் இல்லை என்றால் வேறு எதற்கு காதல் என்று சொல்ல முடியும்?. என நினைத்தவன் கைகளை உயர்த்தி சிறு பிள்ளைகள் போல்
"ஹூர்ரே...."
என்று கத்தினான்."நான் ஆராவை காதலிக்கிறேன்..என் பேபியை நான் காதலிக்கிறேன்... அவளும் நானும், எங்கள் குழந்தையும் மகிழ்ச்சியாக வாழ்வோம்..."
என நினைத்து நினைத்து தனியாக சிரித்துக் கொண்டிருந்தான்...அவனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. அப்படி ஒரு சந்தோசம்..காதல் எத்தனை அழகான விடயம்... இன்று தான் இந்த மூடனுக்கு இவ் விடயம் புரிந்தது... தானும் முன்னிருந்தே அவளை காதலித்தும் அதை அவளிடம் சொல்லவில்லை.. அதைவிட அவன் காதலித்த விடயம் அவனுக்கே தெரியவில்லை என்பதுதான் இங்கு உண்மை எனலாம்..
அன்று கூட அவள் குழந்தை உண்டான விடயத்தினை கூற வந்த போது எப்படி எல்லாம் பேசி விட்டோம்...டிவோர்ஸ் வரை சென்று விட்டோமே... எப்படி எல்லாம் துடித்து போய் இருப்பாள் அவள்... பாவம்.. இப்போது எப்படி அவளை சமாதானம் செய்வது? என்னை மன்னிப்பாளா..??
இல்லை நான் வேண்டாம் என்று விட்டு விடுவாளா?அவளுக்கு ஆபத்து என்ற போது துடித்த மனது இப்போது அவள் இல்லை என்றால்...??
எப்படித் தான் நான் அவள் இல்லாமல் வாழ முடியும்? என எத்தனையோ முறை யோசித்துப் பார்த்தான்...
YOU ARE READING
எனக்கென பிறந்தவன் நீ
Romanceஅக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...