அத்தியாயம் 12

578 24 0
                                    

          ப்ளஸ் 2 எக்ஸாமிகற்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் தன்னுடைய காதலை ஆதிரனிடம்
சொல்ல வந்தாள் அகல்யா.

"ஆது.... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் .... அது அது நான் உங்கள லவ் பண்றேன்னு நினைக்கிறேன் ....உங்க கூட இருந்தா என்னோட  அப்பாவே என் கூட இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது"
என்று சொல்லிக் கொண்டிருக்க அவளை இடைமறித்தான் ஆதிரன் .
"  ஹே....ஹே...என்ன சொல்ற நீ ...
நீ என்னை லவ் பண்றியா ?"
என உறுதிப்படுத்த மீண்டும் கேட்டான். அவள் ஆமாம் என்று தலையை ஆட்ட அவன் கோபம் கூடியது.

       " என்ன பொண்ணுடி நீ எல்லாம் ...வெக்கமா இல்லையா உனக்கு... ஃப்ரெண்ட் லவ் பண்ற பையனை லவ் பண்றேன்னு சொல்ற ....எனக் கூற அகல்யாவும்
"என்ன யார் பிரெண்ட் ....?"என்று இழுக்க
" என்ன தெரியாத மாதிரி நடிக்கிற ....ஹரிணி தான்...
உனக்கு எல்லாம் கொஞ்சம் சிரிச்சு பேசிட்டாட போதுமே... வந்திடுவாங்க பணக்கார பசங்கள பார்த்து..."
என்று இவன் திட்டிக்கொண்டிருக்க கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவனிடம் கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றாள்.

அதற்குப் பிறகு அவன் அவளை சந்திக்கவே இல்லை. எக்ஸாம் முடிந்த பிறகும் அவன் அவளைப் பார்க்கவே இல்லை .சில நாட்களில் பின்னே அவன் ‌ஹரினியின் திருவிளையாடலைக் கண்டு கொண்டான்.
அவள் பல ஆண்களுடன் காதல் என்ற பெயரில் பழகுவதாகவும் ,இது அவளுடைய நண்பர்கள் யாருக்குமே தெரியாது எனவும் இவனுக்கு கேள்விப்பட, ஹரிணியை நேரில் சந்தித்து அவளிடம் அகல்யா பற்றி கேட்க அவள் எந்த தகவலும் சொல்லவில்லை.
ஹரினியிடம் ஏமாந்ததை விட  அகல்யாவை அவன் கேவலமாக பேசியதே அவனுக்கு கவலையாக இருந்தது.

     அவளைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது பெயரைத் தவிர. இப்படியே அவனது படிப்பும் தொடர்ந்து கொண்டிருக்க அவனிடம் யார் காதலை சொன்னாலும் இவனுக்கு அகல்யாவே  நினைவில் வந்தாள்.
இந் நினைவு காலப்போக்கில் காதலாக மாற அவளைப்பற்றி தேட ஆரம்பித்தான் .
அவனிடம் அவளின் பள்ளி சீருடையில் உள்ள ஒரு புகைப்படம் இருக்க அதனை டிடெக்டிவ் இடம்  கொடுத்து தேடச் செல்ல .....அதன் விளைவாக அவளை இரண்டு வருடங்களுக்கு முன்னமே கண்டு பிடித்து விட்டான். அவளை அவளுக்கு தெரியாமல் பார்ப்பது அவள் செல்லும் இடம் செல்வது என நாட்களை கடத்தினான்.

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now