குடும்பத்தில் விடயத்தை சொல்வதைவிட முதலில் கணவனிடமே சொல்லலாம் என்ற முடிவை எடுத்த ஆராதனா கணவன் வரும் வரை காத்திருந்தாள்.
அன்று இரவு 10 மணி போல் வீட்டிற்கு வந்தான் ரிஷி வர்மன். அன்று அவனது ஆபீஸில் நடந்த சிறிய குளறுபடியால் கோபத்தில் வீடு திரும்பிய ரிஷியை அறை வாயிலில் வழிமறித்த ஆராதனா
". வ.... ரிஷி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ..."
என்க அவள் வர்மா என்று கூற வந்து ரிஷி என்றதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரிஷி" என்ன பேசணும்...? என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? என்ன வேணும் உனக்கு?"
என்க திகைத்து நின்றாள் ஆராதனா.எத்தனை நாட்களுக்குப் பிறகு பேசுகிறாள்..
அன்பாகத்தான் பேசவேண்டாம், அதற்காக இவ்வாறா பேசுவது என்ற சிந்தனையில் இருக்க..." உன்னைத்தான் ...என்ன வேணும் லவ் பண்ணனுமா ?
ஏண்டி என்னோட உசுர எடுரக்கிற... லவ்வு லவ்வுன்னு ..."
அவன் கூற கூற ஆராதனா அவனது முகத்தையே பார்த்து இருந்தாள். ரிஷி இதனுடன் நிறுத்தி இருக்கலாம் ஆனால் இன்று அவனது வாயில் சனி குடிபுகுந்து இருக்க மேலும் மேலும் பேசினான்."என்ன பேசாம இருக்க... லவ் பண்றவன் தான் உன்னோட லைஃப் பார்ட்னரா வரணும்னா போடி... உன்னை லவ் பண்றவன் எவனோ அவனை போய் கல்யாணம் பண்ணிக்க... நான் டிவோர்ஸ் தரேன்" என்று கத்திவிட்டு குளியலறை புகுந்து கொண்டான்...
அவன் என்ன சொன்னான் என்று கிரகிக்கவே அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட்டது.
" என்ன சொன்னான் டிவோஸ்ஸா?" இடிந்தேவிட்டாள் ஆராதனா... இப்போது என்ன செய்வது போக இடமும் இல்லை..அம்மா இப்போது இருந்தாலாவது அவரிடம் சென்றிருக்கலாம். இல்லையேல் தன்னுடைய குடும்பத்திடம் தான் சுமதியின் மகள்தான் என்று கூறி இருந்தாலாவது அவர்களிடம் சென்று இருக்கலாம் ...
அதையும் தான் தடுத்து விட்டானே ரிஷி.
YOU ARE READING
எனக்கென பிறந்தவன் நீ
Romanceஅக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...