அத்தியாயம் 16

564 23 0
                                    

அவள் தன்னை பார்ப்பதை அறியாத ஆராதனாவோ மேலும்
" ப்ளீஸ் அகல் நம்மல உயிரா நேசிக்கிரவங்களோட மனச உடைதச்சிடாத  .அப்புறம் அதை எப்போதுமே சரி பண்ண முடியாது"
என தன்பாட்டில்  பேசிக்கொண்டே செல்ல
" என்ன நீ ஏதோ தத்துவம் எல்லாம் பேசுற.... ஏதாவது ப்ராப்ளமா உனக்கும் மாமாவுக்கும்?"
என்று சரியாக கேட்க உடனே சுதாரித்த ஆராதனா
"என்ன... எனக்கும் அவருக்கும் சண்டையா... நோ சான்ஸ்.... நான் ஹேப்பியா இருக்கேன். அதே மாதிரி நீயும் இருக்கணும். அதுக்கு தான் சொன்னேன் .."
என்று அவளை சமாளித்தாள்.

  அன்று முழுவதுமே ஆராதனா அகல்யாவின் வீட்டிலேயே இருந்தாள். எங்கே தான் வீட்டிற்கு சென்றால் நேற்றைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்து விடுமோ என்ற பயத்தினால்தான்.

அன்று மாலை அகல்யாவிடம் கூறி விட்டு வீட்டிற்கு சென்றவள் கணவன் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து தனது வேலைகளை முடித்துவிட்டு நேர காலத்தோடு உறங்கிவிட்டாள். அவனும் இரவு உணவை ஹோட்டலில் முடித்தவன் வீட்டிற்கு வந்து எதுவும் பேசாமல் கட்டிலின் மறு பக்கத்தில் படுத்து விட்டான்‌.

இப்படியே இவர்களின் நாட்கள் பட்டும்படாமலும் சென்று கொண்டிருந்தது.

*************************

அகல்யா  ஆராதனா அன்று கூறிச் சென்றதையே  நினைத்துக் கொண்டிருந்தாள்.
"தான் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறோம் ....பாவம் ஆதிரன் எனக்காக எவ்வளவு தான் இறங்கி போகிறான்... தான் நினைத்தது போலவே அவனும் இவ்வளவு நாள் தன்னை காதலித்து கொண்டு இருந்து இருக்கின்றான் ..."
என எல்லாவற்றையும் யோசித்து அவனுடன் நன்றாக பழகலாம் என முடிவெடுத்தாள்.

     அதன்படி நடக்கவும் செய்தாள் .
அன்றுறு அவனுக்கு இரவு நேர வேலை என்பதால் காலையில் வீட்டில் இருந்தான்.
அவனை எப்படி அணுகுவது என்று தெரியாது 
"ஆ...அது..."
மெல்ல அழைக்க ஆதிரன் அதிர்ச்சியாக
"என்ன சொல்லிக் கூப்பிட்ட....ஆதுவா... தேங்க்ஸ் டார்லிங்...."
என்று குதூகலமாக கூற அதில் மெல்ல சிரித்தவள்
"பிரண்ட்ஸ்..."
என்றவாறு அவன் முன் தனது கையை நீட்டினாள்.

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now