22 நான் உன்னுடன் டேம் இட்

Start from the beginning
                                    

"ஒ..."

"உங்களுக்கு தெரியுமா ஆதிஜி, அவ பாக்ஸிங்ல ஸ்டேட் கோல்டு மெடலிஸ்ட். நல்லாவும் படிப்பா. அதனால தான் எங்க காலேஜ்ல அவளுக்கு ஸ்காலர்ஷிப்ல அட்மிஷன் கிடைச்சது. ஆனா, துரதிஷ்டவசமா அவளால கிராஜுவேஷன் கம்ப்ளீட் பண்ண முடியல."

"அவங்க மேரேஜ் பண்ணிக்க போறவர்கிட்ட இதைப் பத்தி அவங்க பேசலாமே"

"அவ பேசினா... ஆனா, எந்த பிரயோஜனமும் இல்ல. அவர் உங்களை மாதிரி நல்லவர் இல்ல" என்றாள் சோகமாய்.

"என்னை மாதிரி நல்லவர் இல்லன்னா எப்படி?" என்றான் ரசிக்கத் தகுந்த புன்னகையுடன்.

"நீங்க என்னை காலேஜுக்கு போய் படிக்க விடுறீங்க... ஆனா, அவர் அப்படி செய்ய மாட்டேங்கிறார்"

"ஒ... உன்னை காலேஜுக்கு போக விட்டதால நான் நல்லவனா?"

"இல்லையா?" என்று எதிர்கேள்வி கேட்டாள்.

தெரியவில்லை என்பதைப் போல் தோள்களை குலுக்கினான் ஆதித்யா.

"நீங்க நல்லவர் தான்"

"நிஜமாவா?"

"நிஜமா தான்" என்று அழுத்தமாக கூறினாள்.

"தேங்க்யூ ஃபார் யுவர் கம்பிளிமெண்ட்"

"மென்ஷன் நாட்"

ஏதோ சொல்லப் போன ஆதித்யா, கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, தனது பார்வையை திருப்பினான். வேலைக்கார முத்து கதவருகில் நின்றிருந்தான்.

"ஆதி அண்ணா, ஷில்பா மேடம் உங்களை பார்க்க வந்திருக்காங்க" என்றான்.

அதைக்கேட்ட கமலியின் முகம் வெளிறிப்போனது. அவளது கைகள் நடுங்கின. அவற்றையெல்லாம் கவனித்த ஆதித்யாவுக்கு மூக்கின் மீது கோபம் வந்தது. எதற்காக இந்த அளவிற்கு இவள் பயப்படுகிறாள்?

"அவளை வெயிட் பண்ண சொல்லு" என்றான் முத்துவிடம்.

"ஆதிஜிகிட்ட பேச தான் அவ இங்க வந்திருக்காளோ...? *இதுக்காக நீ வருத்தப்பட போறேன்னு* சொன்னாளே... மகமாயி என்னை காப்பாத்துங்க" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் கமலி.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now