"அழாதே... நான் சொன்னது எதையும் மறந்துடக்கூடாது. எப்பவும் ஞாபகம் வச்சு நடந்துக்கணும்"
பொங்கி வந்த கண்ணீரை விழுங்கிவிட்டு, சரி என்று தலையசைத்தாள் கமலி. அந்த காட்சியை கண்ட ஆதித்யா,
"நீங்க கமலியைப் பத்தி கவலைப்படாதீங்க. அவளை நான் பாத்துக்கறேன்" என்றான்.
செல்வியும் சுந்தரியும் சரி என்று தலையசைக்க, அம்மா அத்தையிடம் விடைபெற்று, ஆதித்யாவை பின்தொடர்ந்து சென்றாள் கமலி.
காரில்
கமலி ஏதோ அவஸ்தையில் இருப்பதை போல் உணர்ந்தான் ஆதித்யா. அவனிடம் ஏதோ சொல்ல வேண்டுமென்று அவள் நினைப்பது போல் தோன்றியது அவனுக்கு. அவனை பார்ப்பதும், ஏதோ முணுமுணுப்பதுமாக இருந்தாள் அவள்.
"நீ ஏதாவது சொல்லணுமா?" என்று அவன் கேட்டது தான் தாமதம்,
"ஆமா ஆமா" என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"சொல்லு"
"உங்களுக்கு முதல்ல நான் தேங்க்ஸ் சொல்லணும்"
"எதுக்கு?"
"எங்க அம்மாவையும் அத்தையையும் சென்னைக்கு கூட்டிக்கிட்டு வர்றதுக்காக"
"சரி, அப்பறம்?"
"என்னை மன்னிச்சிடுங்க"
"இது எதுக்கு?"
"காலையில வீட்டுக்குள்ள வர சொல்லி உங்களை கூப்பிடாம நான் உள்ளே ஓடிப் போயிட்டேன். அம்மாகிட்ட நல்லா திட்டு வாங்கினேன்"
"பரவாயில்ல... நான் உன்னை மன்னிச்சிட்டேன். வேற என்ன?"
"இன்னைக்கு அம்மா எனக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணாங்க. எங்க அம்மா, அத்தை, ஃப்ரெண்ட் ஜானகி எல்லார் கூடவும் ஜாலியா இருந்தேன். எனக்கு பிடிச்ச சாப்பாடெல்லாம் அம்மா செஞ்சு கொடுத்தாங்க... ஸ்வீட் கூட கொடுத்து அனுப்பி இருக்காங்க"
எதற்காக இவள் எல்லாவற்றையும் ஒப்பித்து கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை ஆதித்யாவிற்கு.
"எதுக்காக உங்க வீட்ல நீ என்ன செஞ்சங்குற விபரம் எல்லாத்தையும் என்கிட்ட நீ ஒப்பிச்சிகிட்டு இருக்கே?"
![](https://img.wattpad.com/cover/286295265-288-k550993.jpg)
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
9 அம்மாவின் அறிவுரை
Start from the beginning