அவ கூந்தலுள்ள
தொங்கும் அந்த பூவா
மாற வேணும்..
அது போல நானும்
தானே ஆடிஅவளை
மணந்து வரவேணும்..அவ போகுமந்த
பாதை தானே பூவாய்
மாற வேணும்..
அந்த முள்ளுசெடியும் கூட
நல்ல முல்லைகொடியா
மாறி ஆகவேணும்..அவ பேசுமந்த
பேச்சு தானே பாட்டாய்
மாற வேணும்..
அந்த பாட்ட தானே
கேட்டு நிதம் இவன்
மூச்சு வாழவேணும்..அவ பார்குமந்த
பார்வை ஒளி கீற்றாய்
மாற வேணும்..
அதசேர்த்து வைச்சு தானே
துணிந்து அடிச்சு அந்த
இருளை ஓட்டவேணும்..© CG Kumaran
![](https://img.wattpad.com/cover/262783617-288-k129184.jpg)
YOU ARE READING
அவனின் கவிதைகள்..
Poetryதுணைவியை எதிர்நோக்கும் துணைவன் ஒருவனின் காத்திருக்கும் காலமதன் தாக்கத்தின் எண்ணங்கள்.. எண்ணம்தனின் வழிவந்த வார்த்தைகள் அதன் கோர்வைகள்..