தோற்றுவிடுவோம் என்ற பயமே பலத்தை பன்மடங்கு ஆக்குகிறது. அதற்கு எல்லைகள் கிடையாது. வேட்டையாடிய மனித இனம் நாகரிகம் வளர்ந்த போதும் மாற்றிக்கொள்ளாத ஒன்று, தொடர்ந்து வாழ்தலுக்கான வேட்டை குணம் "வலியவன் வாழ்வான்" என்ற ஒற்றை வாக்கியமே நமது வாழ்வியல். மற்ற விளையாட்டுகளில் இருந்து சதுரங்கம் விலகி தனித்தன்மை பெற காரணம் இது வாழ்வியல் விளையாட்டு எதிரே அமர்ந்திருப்பவர்களின் மூளையை கணித்தால் மட்டுமே வெல்ல முடியும். அதனால் தான் சதுரங்கத்தின் ஒவ்வொரு நகர்வுகளிலும் நம்மால் கலக்கமுடிகிறது GAMBIT என்றால் உபாயம். ஆபத்தை உள்ளடக்கிய போட்டியில் வெற்றிகாக விளையாடுவது. இந்த கதையை தொடங்கும் பொழுது ஏன் ஒரு துப்பறியும் கதையோ,காதல் கதையோ சுவாரஸ்யமாக எழுதலாமே என்று நண்பர்களின் கருத்துக்கள் வந்தன. ஆனால் நான் வாழ்ந்த சூழல் என்னை சுற்றியிருக்கும் மனிதர்கள