பாட்டி என்ன சொல்றீங்க ? என்று அதிர்ச்சியாய் வினாவினாள் தான்வி
ஆமா டா ... என்ற அம்பிகா பாட்டி அன்றைய நிகழ்வுகளை கூற ஆரம்பித்தார் ...
நம்ம சொந்த ஊரு இந்த மும்பை இல்ல, கோயம்புத்தூர் பக்கத்துல சின்ன கிராமம் ... அது உனக்கும் தெரியும் , உங்க தாத்தாக்கு (விஸ்வம்) சொந்தமா நாலு ஏக்கரா வயல் நிலம் இருந்துச்சு...நானும் அவரும் அதுல வர்ற வருமானத்த வைச்சு தான் உங்கப்பன் சிவராமனையும் உங்க அத்தைக இரண்டு பேர்த்தையும் வளர்த்தோம் ...
அங்க நம்ம ஊருலேயே தான் இருந்தாரு உங்க தாத்தாவோட பெரியப்ப பையன் வடிவேலு ...
அவுங்களுக்கும் விவசாயம் தான்...
ஒரே மகன் தான் அவங்களுக்கு,பேரு மாதவன் நம்ம கௌஷிக்கோட அப்பா...
சிவராமனும் மாதவனும் ஒரே வகுப்புல தான் படிச்சுட்டு இருந்தான்க...ஆனா நெருங்கிய நண்பனுக எல்லாம் இல்ல...
மாதவன் அம்மா வசந்தி அப்பப்ப அவனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வருவா நானும் சித்த நேரம் போய் அவுங்க வீட்டுல உட்கார்ந்து பேசிட்டு வருவேன்...
அப்ப மாதவனுக்கு பத்து வயசு இருக்கும் அவங்கம்மா விஷக்காய்ச்சல்ல படுத்தவ ஒரேயடியா கண்ண மூடிட்டா...அடுத்த மூனு மாசத்துல அவங்க அப்பாக்கு இரண்டாம் கல்யாணம் ஆயுடுச்சு...
ஒரு ஆறேலு மாசம் போயிருக்கும்,ஒரு நாளு மதியம் நான் வயலுக்கு போய்ட்டு இருந்தேன்,காட்டுப் பாதை அவ்வளவா ஆள் நடமாட்டம் இருக்காது ...
போற வழில நம்ம காட்டுக்கு ஐம்பதடி இருக்கற இடத்துல ஒரு அரசமர பிள்ளையார் கோயில் ஒன்னு இருக்கும்...அங்க பார்த்த மேடைல யாரோ சின்ன பையன் காலையெல்லாம் சுருக்கிட்டு படுத்துருந்தான் ...யாருட இதுனு பக்கத்துல போய் பார்த்த மாதவன் மாதிரி இருந்துச்சு...
என்னட ஸ்கூல்க்கு போக வேண்டிய பையன் இங்க படுத்து கிடக்கானே போய் எழுப்பரேன் உடம்பெல்லாம் அனலா கொதிக்குது... அப்பையே உங்க தாத்தாவுக்கு சத்தம்போட்டு வர சொல்லி இரண்டுபேரும் அவன ஆஸ்பிட்டல்ல கொண்டுபோய் சேர்த்தோம்...
வடிவேலுக்கு தகவல் சொல்லியனுப்ப அவரும் மாதவனோட சித்தியும் வந்து சேர்ந்தாங்க...மூணு நாளா பாவம் புள்ள காய்ச்சல்ல அம்மா அம்மான்னு அணத்திட்டே இருந்தான்...
அவன அங்க கோயில் கிட்ட பார்த்த காட்சியே கண்ணுக்குள்ள இருந்துச்சு, பாவம் அவனும் எம்புள்ள சிவராமன் மாதிரிதானே, அதனால நைட்டெல்லாம் வடிவேலு கூட உங்க தாத்தாவ இருக்க சொல்லிட்டு, காலைல உங்க அத்தைகளையும் சிவராமனையும் ஸ்கூல்க்கு அனுப்பிவச்சுட்டு நான் ஆஸ்பிட்டல் போய்டுவேன்...
கொஞ்சம் உடம்புக்கு சரியான பின்ன டாக்டர் மாதவன வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாரு...வடிவேலு மாதவன வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக அவன் நான் பெரியம்மா கூட தான் இருப்பேன்னு என்னை கட்டிப்பிடுச்சுட்டு ஒரே அழுகை...
அவன் அப்பாவும் சித்தியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பெரியம்மா கூட தான் இருப்பேனுட்டான்...அப்புறம் உங்க தாத்தா தான் , எங்களுக்கு மூணு பிள்ளைக இருக்காங்க அவங்களோட சேர்த்து இவன நாலாவது பிள்ளையா நாங்க பார்த்துக்கறோம்ன்னு சொல்லி வடிவேல சமாதனப்படுத்தி மாதவன எங்க கூடவே கூட்டிட்டு வந்து எங்க பிள்ளையாவே வளர்க்க ஆரம்பிச்சோம்...
சிவராமனும் மாதவனும் கொஞ்ச நாளுக்குள்ளையே ஒண்ணுக்குள்ள ஒண்ணாய்ட்டானுக...உங்க அத்தைகளும் இவனுகள விட பெரியவ 5 வயசும், சின்னவ 3 வயசும் பெரியவளுக...அதனால எந்த போட்டி பொறாமை இல்லாம பக்குவத்தோடு அந்த சின்னப்பையன சிவராமன மாதிரியே தம்பியாவே பார்த்துக்கிட்டாளுக...
இப்படியே காலம் உருண்டோட அவனுங்க ரெண்டுபேரும் பள்ளிப்படிப்பை முடுச்சுட்டாங்க...பக்கதூர்ல இருந்த காலேஜ்லயே ரெண்டுபேருக்கும் அட்மிஷன் கிடச்சுது...
ஆனா இரண்டு பேர்த்தையும் படிக்க வைக்க எங்க கிட்ட வசதி இல்லாம போச்சு...அதனால உங்க தாத்தா வடிவேல் கிட்ட கேக்க இளையசம்சாரத்துப் பிள்ளைய படிக்க வைக்கனும் மகளுக்கு கல்யாணம் வேற பண்ணனும்,வேன்னா அவனுக்கு வரவேண்டிய இரண்டேக்கர் நிலத்தக்கொடுக்கரேன் அத வித்து வேண்ணா அவன் படிக்கட்டும்ன்னு சொல்லிட்டாரு...
இரண்டு நாள் உட்கார்ந்து யோசிச்சவன் மூணாது நாள் நான் சென்னைக்கு போறேன்னு வந்து நின்னான்...எங்களுக்கு என்ன சொல்றதனே தெரியல, ஆனா அவன் அதுல உறுதிய இருந்தவன் சென்னை கிளம்பிட்டான்...
சென்னை போனவன் அங்கையே எதோ வேலை பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சான்...அப்போ அப்போ letter போடுவான்...இங்கிருந்து நாங்களும் letter போடுவோம்...
இப்படியே மூணு வருஷம் முடிய சிவராமனுக்கு பக்கத்துல இருந்த ஒரு துணிமில்லுல சூப்பர்வைசர் வேலை கிடைச்சுது... மாதவனுக்கு அவன் வேலை செஞ்சுட்டு இருந்த கம்பெனி முதலாளி இவனோட திறமையாலையும் படிப்புனாலயும் அவன மும்பைல ஒரு கம்பெனில மேனேஜர் வேலைல சேர்த்துவிட்டாரு...
இங்க உங்க அத்தைகளுக்கு கல்யாணம் பணறதுக்கு சிவராமன் கலேஜ்ல படிக்கறப்போவே வயல வித்துட்டோம்...அப்பறம் கடன் வேற ஆகிப்போச்சு...நானும் உங்க தாத்தாவும் காட்டு வேலைக்குப் போய் அவன படிக்கவைச்சு கடனுக்கு வட்டி கட்டினோம்...
சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படற நிலைமை...எப்படியோ சிவராமனுக்கு வேலை கிடைக்க சாப்பாட்டுப் பாடு தீர்ந்துச்ச... வட்டி கட்டிட்டு இரண்டு வேளையாவது சாப்பட முடுஞ்சுது...
இதெல்லாம் மாதவனுக்கு தெரியப்படுத்தல, பாவம் இத நினைச்சு அவன் கஷ்டப் படக்கூடாதுன்னு...
அப்போ மாதவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் இருக்கும், அங்க கூட வேலை பார்த்த ரஞ்சனின்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான்...
அவளுக்குன்னு தாத்தா மட்டும்தானும், அவர் நடத்திட்டு வந்த இரும்பு கம்பெனிய இவனட்ட ஒப்படச்சுட்டாருன்னும், அதனால வேலை அதிகமா இருக்கறனால வரமுடியலைன்னும் letter போட்டிருந்தான்...
அடுத்த ஒரு வர்ஷத்துல அவனுக்கு கௌஷிக் பிறந்தான், அந்த வருஷம் தான் உங்கப்பாக்கும் உன் அம்மா ராதாக்கும் கல்யாணம் ஆச்சு...
உங்க தாத்தாவோட சொந்த தங்கச்சி மக தான் ராதா, நாலு பொட்டப் புள்ளைக, புருஷனும் குடுச்சுட்டு ஊர் சுத்தரவன்...
மூத்த பிள்ளையே உன் அம்மா தான், அவளுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாம தங்கச்சி கஷ்டப்படுறதப் பார்த்து உங்க தாத்தா சிவராமனுக்கே ராதாவ கல்யாணம் பண்ணி வைச்சாரு...
அப்புறம் மூணு வருஷம் கழிச்சு உங்க அண்ணன் அகிலன் பிறந்தான், அவனுக்கு அடுத்து மூணு வருஷத்துல எங்க வீட்டு மகாராணி நீங்க பிறந்திங்க என்ற பாட்டி தான்வியின் தாடையை பிடித்துப் பாசமாக ஆட்டினார்...
புன்னகையோடு தனது செல்லப் பாட்டியின் தோளில் பாசமாக சாய்ந்து கொண்ட தான்வி, அப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க பாட்டி என்று தனது பாட்டியை மறுபடியும் flashback க்கிற்குள் நுழைத்தாள்...