{badly unedited}
*****
அனைவரும் உரங்கினார்கள் ஆனால் ஹம்சிக்கு உரக்கம் வரவில்லை. எழுந்து ஜன்னல் அருகில் சென்றாள். அந்த உருவம் யார், என்ன வேண்டும் என்று புரியாமல் குழம்பினாள். சட்டென்று கதவு தட்டும் சத்தம் அவளுக்கு கேட்டது. யார் இந்த நேரத்தில் கதவை தட்டுவது என்று யோசித்தாள். பின் மெல்ல கீழ் இறங்கி சென்றாள். பின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு பின் வாசல் அருகில் சென்றாள்.
"யார் அது" என்று வினாவினாள்.
"ஹம்சி நான் தான் கதிர் " என்று அவன் பதில் அளித்தான். அவள் வேகமாக கதவை திறந்தாள்.
"கதிர் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் " என்று கேட்டாள்.
"ஹம்சி நான் வெளிய நின்றுக்கொண்டு இருந்தேன். யரோ கதவை தாள்ளிட்டு விட்டார்கள்" என்று கதிர் கூறினான்.
"உள்ள வாங்க" என்று ஹம்சி அழைத்தாள். அவன் உள்ளே வந்ததும் அவள் கதவை சாத்தினாள். அவள் திரும்பி ஆவனை பார்த்தாள். கதிர் அவளை நெருங்கினான். ஹம்சி மனதில் ஒரு பயம் தோன்றியது அவள் பின்னால் அடி எடுத்து வைத்தாள். அவன் நெருங்கினான். அவளுக்கு பயத்தில் இதய துடிப்பு அதிகரித்தது. அவள் அவன் கண்களை பார்த்தாள். சட்டென்று அவன் பின்னாள் இருந்து அந்த உருவம் அவனை தொட கைய நீட்டியது. அதை கண்ட ஹம்சி பயத்தில் கண்களை மூடி கத்தினாள்.
"என்ன ஆயிற்று ஹம்சி" என்று கதிர் புரியாமல் கேட்டான். அவள் சத்தத்தில் அனைவரும் இறங்கி வந்தார்கள்.
"ஹம்சி என்ன நடந்தது" என்று ஹாரூஷ் அவளை கேட்டான்.
அவள் கண் களங்கி நின்றாள். மாலதி பூஜா இருவரும் அவளை வந்து அனைத்தார்கள்.
"என்ன நடந்தது ஹம்சி" என்று சிவா கேட்டான். ஹம்சி நடுங்கினாள்.
"சிவா அவளை எதுவும் கேட்காதே வா ஹம்சி மேலே போகலாம்" என்று பூஜா அழைத்து சென்றாள். அவள் பின் அனைவரும் சென்றனர். கதிர் அவன் அறைக்கு சென்றான்.
"ஹம்சி என்ன நடந்தது நீ எப்போ கீழ போன??? என்று மாலதி கேட்டாள்.
"யரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு நான் கீழே சென்றேன். பின் வாசல் கதவை யரோ தட்டினார்கள். நான் சென்று கதவை திறந்தேன். அங்கு கதிர் நின்றுக்கொண்டு இருந்தார்."
"நடு இராத்திரியில் காட்டுக்குள் அவன் என்ன செய்கிறான்" என்று சிவா கேட்டான்.
"சிவா அமைதியாக இரு அவள் சொல்லட்டும்" என்று பூஜா கூறினால்.
"அவரை உள்ளே அழைத்து கதவை சாத்தினேன். பின் நான் திரும்பியதும்"..... என்று ஹம்சி தயங்கினாள் அவள் ஹாரூஷ்யை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். அவள் உள்ளத்தில் ஒரு பயம் தோன்றியது. "நான் திரும்பியதும் கதிர் என்னை நோக்கி நடந்தார். நான் பின்னாள் நடந்தேன் அப்போது" என்று தயங்கினாள் பின் தலை குனிந்தாள். அனைவரும் ஹாரூஷ்யை நிமிர்ந்து பார்த்தார்கள். அவன் பல்லை கடித்துக்கொண்டு முகத்தை திருப்பினான்.
"அப்போ என்ன நடந்தது ஹம்சி " என்று தயக்கத்துடன் மாலதி கேட்டாள்.
"அப்போது கதிர் என்னை நெருங்கி வர நான் பயத்தில் பின்னாள் நடந்தேன். அப்போது அந்த எரிந்த உருவம் அவர் பின்னாள் தோன்றியது" என்று அவள் கூறியது அனைவரின் முகமும் பயத்தில் மாறியது.
"அதுக்கு பிறகு என்ன நடந்தது" என்று பூஜா கேட்டாள்.
"அந்த உருவம் என்னை தொட கையை நீட்டியது உடனே நான் கத்திவிட்டேன்" என்று அவள் கூறினாள். ஹாரூஷ்யின் முகம் மலர்ந்தது.
"எனக்கு பயமாக உள்ளது" என்று மாலதி கூறினாள்.
"எனக்கும் "என்று சிவா கூறினான். பூஜா அவனை பார்த்து முறைத்தாள். சிவா தலை குனிந்தான்.
"எனக்கு சத்தியமாக பயமா இருக்கு" என்று மாலதி கூறினான்.
"மாலதி பயப்படாத" என்று ஹாரூஷ் கூறினான்.
"எப்படி ஹாரூஷ் ஒவ்வொறு நாலும் எனக்கு பயம் அதிகமாகுது. உங்களுக்கு புரியலையா இப்போ எல்லாம் அந்த உருவம் நம்ம கண்களுக்கு அதிகமாக தெரியுது. இது நல்லதுக்கு என்று எனக்கு தோன்றவில்லை" என்று மாலதி கூறினான்.
"மாலதி அது தான் நம்மல எதுவும் செய்யவில்லை " என்று சிவா கூறினான்.
"எப்படி எதுவும் செய்யல என்று கூறுகிறாய். அன்று ஹம்சியை எரிக்க முயன்றது??? என்று மாலதி கேட்டாள்.
"அது எப்படி நடந்தது என்று நமக்கு தெரியலயே "என்று சிவா கூறினான்.
"காட்டுக்குள்ள ஹம்சி அந்த உருவத்த பார்த்து இருக்கிறாள். அதுதான் அவளை கொள்ள முய்ர்ச்சி செய்து இருக்கும்" என்று மாலதி கூறினான்.
"என்க்கு மாலதி சொல்லுவது சரி என்று தோன்றுகிறது " என்று ஹம்சி கூறினாள்.
"எப்படி சொல்கிறாய் ஹம்சி " என்று சிவா கேட்டான்.
"சிவா அன்னைக்கு என் அம்மா குறள் கேட்டுதான் நான் காட்டுக்குள் மீண்டும் சென்றேன். அங்கு யாரும் இல்லை. நான் அந்த வீட்டுக்குள் சென்றதும் அந்த வீடு பற்றி எரிந்தது. அங்கு யாரும் இல்லாத போது அது எப்படி பற்றி இருக்கும்??? என்று ஹம்சி கேட்டாள்.
"அப்போ அது உன்ன கொள்ள வந்தது என்று கூறுகிறாயா???" என்று சிவா கேட்டான்.
"என்க்கு சரியாக தெரியவில்லை " என்று ஹம்சி கூறினாள்.
"இதுக்கு மேல் என்ன நடக்கபோகிறது யார் அந்த உருவம் அது ஏன் நம்மை தேடி வருகிறது" என்று மாலதி கேட்டாள்.
"தெரியல நம்ம எதுவாவது செய்ய வேண்டும். இங்கு மந்திரவாதி யாரையாவது அரைத்து வர வேண்டும்" என்று ஹாரூஷ் கூறினான்.
"ஆமாம் டா நாளைக்கே அழைத்து வர வேண்டும்" என்று சிவா கூறினான்.
*****
அடுத்த நாள் காலை.
"சிவா பக்கத்தில் யாராவது மந்திரவாதியை யாரையாவது அழைத்து வர வேண்டும்" என்று ஹாரூஷ் கூறினான்.
"சரி ஹாரூஷ் அனைவரும் செல்வோம்" என்று சிவா கூறினான். கதிர் ஹம்சியை அழைத்தான்.
"என்ன கதிர்" என்று ஹம்சி கேட்டாள்.
"ஹம்சி அருகில் உள்ள கோவிலுக்கு செல்வோம் என்னுடன் வா" என்று கதிர் அழைத்தான்.
"கதிர் நான் ஒரு முக்கியமான வேலையாக என் நண்பர்களுடன் வெளியே செல்கிறேன்" என்று ஹம்சி கூறினாள்.
"ஹம்சி உனக்கு நான் முக்கியமா இல்ல உன் நண்பர்கள் முக்கியமா??? என்று கதிர் கேட்டான்.
"கதிர் இதுல யார் முக்கியம் என்றது முக்கியம் இல்ல நாங்க செல்கிற வேலை தான் முக்கியம்" என்று ஹம்சி கூறினாள்.
"ஹம்சி எதுவாக இருந்தாலும் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் நீ என்னுடன் வா" என்று கதிர் உத்தரவிட்டான். வேரு வழி இல்லாமல் ஹம்சி சம்மதித்தாள். கதிர் குளிக்க அவன் அறை சென்றான். ஹம்சி மேலே சென்றாள்.
"ஹம்சி நீ கிளம்பல??? என்று மாலதி கேட்டாள்.
"மாலதி நான் வரவில்லை " என்று தயக்கத்துடன் பதில் அளித்தாள்.
"ஹம்சி நீ இல்லாம நாங்க எப்படி செல்வது" என்று மாலதி கேட்டாள்.
"மாலதி கதிர் என்ன வெளிய அழைத்து செல்கிறார். நான் அவருடன் செல்ல வேண்டும்" என்று ஹம்சி கூறினாள்.
"இது நீ எடுத்த முடிவா இல்ல அவர் எடுத்த முடிவா??? என்று கோபமாக மாலதி கேட்டாள்.
"என்ன முடிவும்" என்று அறைக்குள் நுழைந்த சிவா கேட்டான். அவன் பின் பூஜா ஹாரூஷ் இருவரும் நுழைந்தார்கள்.
"சிவா ஹம்சி நம்ம கூட வரவில்லையாம்" என்று மாலதி கூறியதும் ஹம்சி அங்கு இருந்து வெளியே சென்றுவிட்டால். அனைவரும் அவளையே திரும்பி பார்த்தார்கள்.
"நம்ம கூட வரவில்லை என்றாள் தனியாக என்ன செய்ய போகிறாள்??? என்று ஹாரூஷ் கேட்டான்.
"அவ கதிர் கூட வெளியே செல்கிறாள்" என்று மாலதி கூறினாள்.
"கதிர் உடன் தனியாவா??? என்று ஹாரூஷ் கேட்டான்.
"ஆமாம் ஹாரூஷ் " என்று மாலதி கூறினாள்.
"நேற்றே அவன் அவளிடம் தவறாக நடக்க முயர்சித்தான். இன்று நான் அவளை தனியாக அவனுடன் அனுப்ப மாட்டேன்" என்று ஹாரூஷ் கூறினான்.
"அவளை எவ்வாறு தடுப்பாய்" என்று பூஜா கேட்டாள்.
"தெரியவில்லை" என்று ஹாரூஷ் கூறினான்.
*****
கதிர் வெளியே சென்று அவன் வண்டியை எடுத்தான். ஹம்சியும் வெளியே சென்றாள்.
"வா ஹம்சி செல்லாமல் " என்று கதிர் அவளை அழைத்தான்.
"கதிர் ஒரு நிமிடம் தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு ஹம்சி உள்ளே சென்றாள். இதை கவனித்த ஹாரூஷ் வேகமாக சமையல் அறை சென்றான். சமையல் அறை நுழைந்த ஹம்சி ஹாரூஷ்யை கண்டதும் திடுக்கிட்டாள். அவனை நிமிர்ந்து பார்க்காமல் தண்ணீர் குடித்தாள்.
"ஹம்சி" என்று ஹாரூஷ் மெல்ல ஆரம்பித்தான். அவள் எதுவும் பேசாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஹம்சி நீ கதிர் உடன் செல்ல கூடாது" என்று பொறுமையாக ஹாரூஷ் கூறினான்.
"ஏன்" என்று ஹம்சி கேட்டாள்.
"என்க்கு பிடிக்கல " என்று ஹாரூஷ் உரிமையாக கூறினான். அதை கேட்டதும் ஹம்சி மனதில் ஒரு மிகிழ்ச்சி தோன்றினாலும், கூடவே பயமும் ஒட்டிக்கொண்டது.
"உனக்கு பிடிக்கவில்லை என்றாள் என்ன ஹாரூஷ்" என்று ஹம்சி கேட்டாள்.
"ஹம்சி நீ போக கூடது" என்று அழுத்தமாக கூறினான். அவள் எதுவும் பேசாமல் வெளியே நடக்க முற்ப்படாள் ஹாரூஷ் அவளை தடுத்தான். அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
"ஹாரூஷ் வழி விடு " என்று கூறினாள். அவன் பதில் கூறாமல் அவளை நோக்கி நடந்தான். ஹம்சி இதய துடிப்பு அதிகரித்தது. அவள் கதவுடன் ஒட்டி நின்றாள். ஹாரூஷ் நெருங்கினான். அவன் மூச்சி காற்று அவள் மீது பட்டு அவள் கண்களை மூடினாள். ஹாரூஷ் இன்னும் நெருங்கினான். சட்டென்று ஹம்சி அவனை தள்ளிவிட்டு நகர்ந்தாள். சட்டென்று அவளை இழுத்து அவள் கூந்தலை இருக்கி பிடித்து அவள் இதழில் இவன் இதழை பதித்தான்.💋
*****
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💋