வலியின் மொழி மௌனம்

Start from the beginning
                                    

அதுவும் நேற்றைய சம்பவத்தின் போது கூட ரம்யாவின் கணவனுக்கு ஆதரவாகப் பேசிய அம்மாவை நான் என்ன சொல்லி அடக்க என்று புரியாது விழித்தேன்.

ஆனால் அம்மாவுக்கு இது புரிவது கடினமே. அவளைத் தன் சரிபாதியாக மதிக்கும் என் தந்தை போன்ற கணவர் வாய்க்கப் பெற்றவளுக்கு ரம்யாவின் நிலை புரிந்தால் தான் ஆச்சரியம். கூடவே பெண் என்றால் பொறுத்துப் போக வேண்டுமென்ற பொதுப்புத்தி அம்மாவுக்கு அதிகம்.

ரம்யாவின் கணவனது குடும்பம் முழுவதும் பழமைவாதிகள். அவர்களைப் பொறுத்தவரையில் பெண் என்றால் ஆணுக்கு அடங்கியவள். அப்படி அடங்காத பட்சத்தில் ஆணால் அடக்கப்பட வேண்டியவள். ஏதோ அவள் வேலைக்குச் செல்வது குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு நல்லது என்பதால் அவன் அவளை வேலையை விடுமாறு இதுவரைக்கும் கட்டாயப்படுத்தவில்லை. அவ்வளவுக்கு அவன் நல்லவன் தான்(?)

திருமணம் முடிந்த நாளன்று இரவில் எண்ணற்றக் கனவுகளுடன் காத்திருந்தவளுக்கு அவளது கணவனின் செய்கை உச்சப்பட்ச அதிர்ச்சியே. இதமான தென்றலாய் வீச வேண்டிய தாம்பத்தியத்தில் மென்மையான மலராக முகிழ வேண்டிய அவர்களின் பந்தம், அவள் கணவனின் முரட்டுத்தனத்தால் சூறாவழியான தாம்பத்தியத்தில் சிக்கி காய்ந்த சருகானது.

ரம்யா எனும் நல்லதொரு வீணையை ஒரு நலம் கெட்டவனிடம் ஒப்படைத்ததன் விளைவு இரவு வருகிறது என்றாலே அவள் நடுங்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் உடலில் ஏற்படும் காயங்களோடு அவனது இரக்கமற்ற அணுகுமுறையால் மனதளவிலும் புண்பட்டுப் போனாள் ரம்யா.

அவனிடம் இது குறித்துப் பேசினால் தீர்வு கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தவள் அவனிடமே "ஏன் இப்பிடி முரட்டுத்தனமா நடந்துக்கிறிங்க? எனக்கு முடியலைங்க... ஆபிஸ்ல போய் வேலை பார்க்க கஷ்டமா இருக்கு... உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது" என்று வெளிப்படையாகவே பேசிப் பார்த்தாள். அதற்கு அவனது பதிலடி "நான் ஆம்பிளைடி" என்பது மட்டுமே.

வலியின் மொழி மௌனம்Where stories live. Discover now