கண் விழித்து பார்த்தேன். சிறிது நேரம் கழித்து. அவளே தான். என் தேவதை. புடவையிலும் சுடிதாரில் பார்த்த அவளை, ஒரு ஆங்கில படத்தின் கதாநாயகி போல பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறாள்.
அவளுக்கு அருகில் ஒருவன் இருந்தான். அவன் பேச ஆரம்பித்தான்.
என்னடா. ஒன்னும் தெரியாதவன் மாதிரி முழிக்கிற?
டேய். சத்தியமா இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல டா...
சொல்லுறேன். தெளிவாக கேளு...
நான் ஒரு scientist. நெறய experiment பண்ணியிருக்கேன். ஆனா, Mr முத்துரவிசாமியோட book ah படிச்சதுக்கு அப்புறம், அவருக்கு இருந்த அதே சக்தி எனக்கும் வேணும்னு தோணுச்சு. அதுனால அந்த மீன் இருக்கிற இடத்தை தேடி ரொம்ப வருஷம் அலஞ்சேன். அது எந்த beach அப்டின்னு கண்டுபிடிக்கவே எனக்கு 6 வருஷம் தேவைபட்டுச்சு.அப்போ. எங்கே இருக்கு அந்த beach?
அங்கே போய் நீ என்ன பண்ண போற? மீன் இருக்கிற இடம் மட்டும் தான் அது. அதுக்கு பின்னாடி இருக்கிற வில்லங்கம் பத்தி உனக்கு பாதி தான் தெரியும். அந்த மீனை ஆராய்ச்சி பண்ணி பார்த்தப்போ சில விஷயங்கள் கவனிச்சேன். அதுல கொஞ்சம் தேன் இருந்துச்சு.
ஆமா... நான் கூட சுவீட்டா இருக்கேனு நெனச்சேன்.
அந்த தேன்ல தான் விஷயமே இருக்கு. அந்த தேன் உலகத்துல எந்த பகுதில கிடைக்குதுனு எனக்கு தெரியாது. ஆனா, எங்கேயோ ஒரு இடத்தில மட்டும் தான் இருக்கு. ஒரு தடவை அந்த தேனை சாப்பிட்டா அதுக்கு அப்புறம் எந்த மாதிரி சக்தி வரும்னு உனக்கே தெரியும்.
சரி.. இதுல நான் எங்கே வந்து சிக்குனேன்?
அது உன்னோட நேரம். கோயம்புத்தூர் ல இருந்து கொடைக்கானல் வர பஸ்ல தான் நானும் வந்தேன். என் கைல மீனும் என்கிட்ட இருந்துச்சு. அப்போதான் அந்த பஸ்ல என்னோட college classmate ah பாத்தேன்.
ஆம்.. என் தேவதையை தான் அவன் classmate என கூறினான். அதில் இருந்து அவள் பேச ஆரம்பித்தாள்.
YOU ARE READING
அங்கும் இங்கும் விலகாதே !!
Science Fictionபொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?