எனக்குப் பிடித்த ஒரு வாக்கியம்..
"உன்னுடைய இந்த வாழ்க்கை .. பலரது கனவு..." ஆமாம்.
என்ன தான் வாழ்க்கையில் பிரச்சனை....
அவமானம், அழுகை , வெறுப்பு , தனிமை இருப்பினும்....
நம் வாழ்வில் நாம் சந்தித்த அழகான தருணங்களை நினைவில் கொள்..
இந்த வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் என யோசி......
தெருவில் பிச்சை எடுக்கும் பெண்....
குழந்தையை தன்னுடன் கட்டிக் கொண்டு....
வெயிலில் அலையும் பெண்ணை விட உன் வாழ்க்கை மேம்பட்டது தானே.....
உன் வாழ்க்கை அவளுக்கு கிடைத்தால் அவள் எப்படி அதை ரசிப்பாள்......
அப்படியே நீயும் உன் வாழ்க்கையை ரசி.
வாழ்க்கை வாழத் தான்.
வாழ்க்கையின் மிகப்பெரும் சந்தோஷம்....
அடுத்தவரை சந்தோஷப் படுத்தி பார்ப்பது.
யார் யாருக்கோ நீ உன் வாழ்வில் அனுசரித்து போகும் போது....
உன் வாழ்க்கை துணைவனுக்காக அனுசரிப்பதில் ஒரு நஷ்டமும் இல்லை.