"வி.. விமல்.."

"ம்.. அவரை உனக்கும் பிடிச்சிருக்கு தான.."னு சக்தி கேட்கிறா.

"ஆமா.. ஆனா.."னு ப்ரீத்தி இழுக்கிறா.

"சரி விடு.."னு சக்தி சொல்றா..

அர்ஜூனும் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்துடுறான்.. ப்ரீத்தி சாப்டிருக்க மாட்டானு அவளை சாப்பிட கூட்டிட்டுப் போக சொல்றான் சக்தியை.

ப்ரீத்தியோட அம்மாவுக்கு சர்ஜரி நல்லபடியா முடிஞ்சுது. அவங்க பிழைச்சிட்டாங்க.

ப்ரீத்தி அர்ஜூன் கிட்ட தேங்க்ஸ் சொல்றா.

அர்ஜூனுக்கு அவ மேல கோபம் எதுவும் இல்லைனாலும் அவனால ப்ரீத்தி கிட்ட இயல்பா பேச முடியலை..

அப்புறம் சக்தியும் அர்ஜூனும் வீட்டுக்கு கிளம்புறாங்க.

நேரம் கிடைக்கும் போது.. சக்தியும் அர்ஜூனும் ப்ரீத்தியோட அம்மாவை பார்க்க வந்தாங்க.

தீபாவளிக்கு டிரெஸ் எடுக்க.. சக்தியும் அர்ஜூனும் கடைக்குப் போனாங்க.

கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்கப் போகும்போது ஆளுக்கொரு சேரி எடுத்துட்டு நின்னத நினைச்சு சக்தியும் அர்ஜூனும் சிரிக்கிறாங்க.

இந்த முறை அப்டி சொதப்பாம.. இரண்டு பேரும் சேர்ந்து தங்களுக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்றாங்க.

தீபாவளியை சக்தி வீட்டில.. சக்தி, அர்ஜூன், இந்திரா, சரவணன், கீதா, சுந்தரம்னு எல்லாரும் ஒன்னா சேர்ந்து சந்தோஷமா கொண்டாடுறாங்க.

சுந்தரமும் சரவணனும் பேசிட்டு இருக்காங்க.. சக்தி அவங்களுக்கு பலகாரம் கொண்டுவந்து தர்றா.

கீதாவும் இந்திராவும் கிச்சன்ல பேசிட்டு வேலை பார்த்துட்டு இருக்காங்க.

இந்திரா.. சக்தியை கூப்பிட.. சக்தி கிச்சனுக்கு போயிடுறா.

அர்ஜூனும் வந்து சரவணன் சுந்தரம் கூட உட்கார்ந்து பலகாரம் சாப்பிடுறான்.

அர்ஜூன்.. "அங்கிள்.. உங்க பொண்ணு பெரிய cooking expert.. ஒரு தடவை மைசூர்பாகு பண்றேனு ஏதோ வீடியோ பாத்துட்டு ஒன்னு பண்ணா பாருங்க.. உடைக்கவே முடியலை.. அவ்ளோ ஸ்ட்ராங்க்.."னு சிரிச்சிட்டே சொல்றான்.

சரவணனும் சுந்தரமும் அவங்க பங்குக்கு இந்திரா கீதா சமையலை குறை சொல்றாங்க.

சுந்தரம்.. "கீதா உப்புமா பண்ணுவா பாருங்க.. ம்.. வாய்லே வைக்க முடியாது.."னு சொல்லி சிரிக்கிறார்.

அர்ஜூன் சரவணனை பார்த்து.. "அப்பா நான் சொல்றேன்.. உங்களுக்கு அம்மா பண்றதுல எது பிடிக்காதுனு.. ம்.. ரவா கிச்சடி.. கரெக்டா ப்பா.."னு சொல்றான்.

சரவணன் அர்ஜூனை பார்த்து சிரிச்சிட்டே.. "எனக்கு தெரியும்.. உனக்கும் அதான பிடிக்காது.."னு சொல்றார்.

"ஆமா.. ப்பா.."னு அர்ஜூன் சொல்ல சிரிச்சிட்டு இருந்த மூணுபேரும் அப்பதான் கவனிக்கிறாங்க.

கீதா சக்தி இந்திரா மூணுபேரும் அவங்கள முறைச்சிட்டு நிக்கிறாங்க.

கீதா.. "நான் பண்ற உப்புமாவை வாயில வைக்க முடியாதா.."னு கேட்கிறாங்க.

"அய்யோ.. அப்டிலாம் இல்லமா சும்மா கிண்டலுக்கு சொன்னேன்.."னு சுந்தரம் சமாதானம் பண்ண முயற்சி பண்ணிட்டு இருந்தார்.

இந்திரா.. "உங்களுக்கு என்ன கிச்சடியா.."னு கேட்கிறாங்க.

சரவணன் பாவமா இல்லைனு தலையாட்டுறார்.

எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டு எதுவுமே தெரியாத மாதிரி சரவணனையும் சுந்தரத்தையும் பார்த்து சிரிச்சிட்டு இருந்த அர்ஜூன் காதை பிடிச்சு திருகுறா சக்தி.

"அம்மு.. வேண்டாம்.."னு அவளை சமாளிச்சு வீட்டுக்குள்ளே ஓடிப்பிடிச்சு விளையாடுறாங்க இரண்டு பேரும்..

இரண்டு பேரும் டயர்டாகி கட்டில்ல உட்கார்றாங்க..

சக்தி அர்ஜூனை முறைச்சிட்டே.. "நான் பண்ண மைசூர்பாகு நல்லா இல்லையா.."னு கேட்கிறா.

"ஆமா.. நான் எப்ப மைசூர்பாகு பண்ணேன்.. நான் பண்ணவேயில்லையே.. அப்புறம் ஏன் அர்ஜூன் அப்டி சொன்ன.."னு சக்தி கேட்கிறா.

அர்ஜூன் சிரிச்சிட்டே சக்தியை தன்னோடு சேர்த்து அணைத்து.. "சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.."னு சொல்றான்.

"அதான்.. ஏன் சொன்ன.."னு சக்தி கேட்கிறா.

"ம்.. இப்டி என் பொண்டாட்டியை கடத்திட்டு வந்து கொஞ்சத்தான்.."னு அர்ஜூன் சொல்ல.. வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள் சக்தி.

அடியே.. அழகே..Where stories live. Discover now