சக்தியும் அர்ஜூனும் ப்ரீத்தியோட அம்மாவை பார்க்கிறதுக்காக ஹாஸ்பிட்டலுக்கு போறாங்க.
ப்ரீத்தியோட அம்மா கிட்ட பேசிட்டு.. அர்ஜூன் சக்தி கிட்ட.. "அம்மு.. நீ இங்கே இரு.. நான் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்.."னு சொல்லிட்டு அர்ஜூன் போறான்.
அப்ப ஒரு நர்ஸ் வந்து.. சக்தியை வெளியே வெயிட் பண்ண சொல்றாங்க.
சக்தியும் சரினு சொல்லிட்டு வெளியே வரும் போது.. ப்ரீத்தி யாரோ ஒருத்தரோட பேசிட்டு இருக்கிறத பார்க்கிறா.
சக்தி ப்ரீத்தியை பார்த்தாலும் எதுவும் பேசாம அங்கே உட்கார்றா.
ப்ரீத்தி சக்தி கிட்ட வந்து பேசுறா. அப்ப ப்ரீத்தியோட அம்மாவை சர்ஜரிக்காக கொண்டு போறாங்க.
ப்ரீத்தி.. சக்தி கிட்ட.. "அம்மாவுக்கு எதுவும் ஆகாதுல்ல.."னு பயந்து போய் கேட்கிறா.
"அம்மா நல்லா இருப்பாங்க.. நீ தைரியமா இரு.."னு சக்தி சொல்றா.
"எனக்குனு இப்ப இருக்கிறது அவங்க மட்டும் தான்.. அதான்.."னு ப்ரீத்தி அழ ஆரம்பிச்சிடுறா.
சக்தி தான் அவளை சமாதானம் பண்றா.
கொஞ்ச நேரம் கழிச்சு.. சக்தி.. ப்ரீத்தி கூட பேசிட்டு இருந்தது யாருனு கேட்கிறா.
"அவரும் நானும் ஒரே இடத்தில தான் வேலை பார்க்கிறோம்.. அவர் என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் என்னை விரும்புறார்.. ஆனா.."னு ப்ரீத்தி இழுக்கிறா.
"ஆனா என்ன.."னு சக்தி கேட்கிறா.
"ஏற்கனவே நான் பண்ண முட்டாள்தனத்தால.. ஒரு உயிர் போயிருக்கு.. அதனால நான் அவருக்கு பொருத்தமானவனு எனக்கு தோணலை..
அதான் அந்த வேலையை விட்டுடலாம்னு நினைச்சேன்.. அர்ஜூன் கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு வந்தேன்..
ஆனா அர்ஜூன் நான் சொல்றத கேட்கக்கூட தயாரா இல்லை.. அர்ஜூனோட கோபம் நியாயம் தான்.."னு ப்ரீத்தி சொல்றா.
சக்தி எல்லாத்தையும் அமைதியா கேட்டுட்டு இருக்கா.
"ப்ரீத்தி.. அவர் பேர் என்ன.."
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..