அத்தியாயம் 13

Start from the beginning
                                    

அந்த அறையில் சற்று சாய்வாக அமர்ந்து இருந்த மகளிடம் சாரதா. "ம்ஹூம், கிருஷ்ணா வந்து உன்ன பொண்ணு கேட்டப்போ கூட எனக்கு கொஞ்சம் கோவம் தான், என்னடா கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ்ஸே இல்லாமே இந்த பையன் இப்பிடி பேசுறானேன்னு..ம்ச்.. உன் வாழ்க்கை எப்பிடி இருக்குமோன்னு கொஞ்சம் பயம் கூட இருந்துச்சு சின்னு,ஆனா இந்த ரெண்டு நாளும் இந்த வீடு உன்ன தாங்குறது பார்த்ததிலே அப்பாபாபாபா..எனக்கு மனசு நெறைஞ்சு போச்சுடா" என்று நிறைவாய் சிரித்தாள் அன்னை.

சிரித்த ராதா, கதவருகே கிருஷ்ணா வருவதை பார்க்கவும் "ஹாய் கிச்சா" என்றாள்.

சாரதா திரும்பி பார்த்துவிட்டு மரியாதைக்காய் எழுந்தாள்.

"ஹாய்டா" என்றபடி உள்ளே வந்தவன் ராதாவிடம் வந்து நின்றவன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டான். மாமியாரிடம் திரும்பி "நீங்க எதுக்கு ஆன்டி நிற்கிறீர்கள்? உட்காருங்க.." என்று ராதாவை பார்த்து சிரித்தவன் "நாங்க இப்பிடி தான்" என்றவன் ராதாவை தன்னோடு சேர்த்து கொண்டான்.

சாரதா சிரித்துகொண்டு அமர்ந்தாள்.

"யூ லுக் டல் கிச்சா, ஸ்லீப் ஃபார் சம் டயம்..ஆமா எங்க நம்ம கேங், எல்லாரும் எப்ப வர்றாங்க?" என்றாள்.

"ஆல் ஆர் ஆன் தி வே ராஸ், தே ஸூட் பீ ரிச்சிங் பை லஞ்ச் ஈவினிங் எல்லாரும் வந்துடுவாங்க" என்றவன் "நான் இங்கேயே படுத்துக்கிறேனே" என்றவன் அத்தோடு நில்லாமல் மறுபுறம் அந்த கட்டிலில் வந்து படுக்கவும் சாரதா சட்டென எழுந்து "சரி நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் பண்ணுங்க" என்றபடி நகரப்போனாள்.

படுத்து கொண்ட கிருஷ்ணா ராஸின் வலது கையை பிடித்து கொண்டு "நீங்க பாட்டுக்கு பேசுங்க ஆன்டி, ஐ வில் நாட் கெட் டிஸ்டர்ப்டு..நான் தூங்கிடுவேன்" என்றவன் ராஸுடன் சிறுகுழந்தை போல வம்பிழுத்து கொண்டு இருந்தான்.

"ம்ஹூம்.." என்று சிரித்து கொண்டு எழுந்து சென்றாள் சாரதா.அவள் வாசல் கடக்கும் வரையில்

"ஹே இப்ப மட்டும் எத்னிக் உனக்கு கம்பர்டபிளா இருக்கா?" – கிருஷ்ணா.

இதுவும் காதலா?!!!Where stories live. Discover now