"இது யாரு.."னு கீதா நிவேதா கிட்ட கேட்கிறாங்க.
"பக்கத்து வீட்டு வாலுங்க.."னு கீதா கிட்ட சொல்லிட்டு.. நிவேதா அந்த குட்டி பசங்களை பார்த்து.. "என்ன இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையா.."னு கேட்கிறா.
அதுக்கு ஒரு குட்டிப் பையன்.. "இவனுக்கு பீவர்.. அதான் லீவு.."னு சொல்றான்.
"அவனுக்கு தானே பீவர்.. உனக்கு என்ன.."னு நிவேதா கேட்கிறா.
"அச்சோ.. ஆண்ட்டி.. உங்களுக்கு இதுகூட தெரியாதா.. நாங்க ட்வின்ஸ்.. அவனுக்கு பீவர் வந்தா எனக்கும் வந்துடும்.."னு சொல்றான் அந்த குட்டிப் பையன்.
எல்லாரும் சிரிக்கிறாங்க. "லீவு போட்டுட்டு கதையா சொல்ற.."னு நிவேதா அந்தக் குட்டிப் பையனை துரத்த.. அவன் சக்தி மடியில வந்து உட்கார்றான்.
"ஆண்ட்டி உங்க பேர் என்ன.."னு சக்தி கிட்ட அந்த குட்டிப் பையன் கேட்கிறான்.
"என் பேர் சக்தி.. உன் பேர் என்ன.."னு சக்தி கேட்கிறா.
"என் பேர் அகில்.. இவன் பேர் நிகில்.."னு அந்த குட்டிப் பையன் சொல்றான்.
சக்தியும் அந்த பசங்க கூட விளையாடிட்டு இருக்கா. நேரம் போனதே தெரியலை. அந்த குட்டிப் பசங்களுக்கும் சக்தியை ரொம்ப பிடிச்சு போச்சு..
"இரண்டு பேர்ல யார் சூப்பரா படிப்பீங்க.."னு சக்தி கேட்கிறா.
"நான் தான்.. நான் தான்.."னு இரண்டு பேரும் குதிக்கிறாங்க.
"இவனுக்கு ஹிந்தி மட்டும் தான் எழுத தெரியும்.. ஆனா எனக்கு தமிழும் எழுத தெரியுமே.."னு அகில் சொல்றான்.
"நானும் எழுதுவேனே.."னு சொல்லிட்டு நிகில் ஒரு நோட்டு எடுத்து அ, ஆ மட்டும் எழுதுறான்.
"இவனுக்கு இது மட்டும் தான் எழுத தெரியும்.. எனக்கு அ ஆ இ ஈ வரைக்கும் எழுத தெரியுமே.."னு அகில் சொல்றான்.
அந்த நோட்டை அப்டியே அங்கையே வச்சிட்டு.. இரண்டு பேரும் விளையாட ஆரம்பிச்சிடுறாங்க.
சக்தியும் அவங்களோட குழந்தை மாதிரி ஓடி விளையாடிட்டு இருக்கா.
அர்ஜூன் அப்ப தான் எழுந்து வர்றான். சக்தி விளையாடிட்டு இருக்கிறத பார்க்கிறான்.
தன்னை மறந்து சக்தியை ரசிச்சிட்டு இருக்கான் அர்ஜூன்..
அந்த நோட்டும் பேனாவும் கண்ல பட்டதும் அர்ஜூன் அதை எடுக்கிறான்..
வனத்தில் திரிந்த
பட்டாம்பூச்சியோ..
நீலவானுக்கு வண்ணந்தீட்டிய
வானவில்லோ..
இருளை ஒளிரச்செய்த
வெளிச்சமோ..
ஏதுமறியாது இயல்பாய்
புன்னகைக்கிறாள்..அம்மு..
தன் மனசில அந்த நிமிடம் தோணுனத அர்ஜூன் அதில எழுதுறான்.
எழுதி முடிச்சிட்டு சக்தியை ரசிச்சபடி உட்கார்ந்து இருக்கான். சக்தி அப்ப தான் அர்ஜூன் எழுந்திட்டத கவனிச்சிட்டு.. அர்ஜூன் கிட்ட வந்து.. சாப்பிட கூப்பிடுறா.
அர்ஜூனும் சாப்பிட உட்கார்றான். அப்ப நிவேதா அந்த நோட்டை எடுத்து அதில எழுதி இருக்கிற கவிதையை வாசிக்கிறா.
"சக்தி.. சக்தி.."னு நிவேதா கூப்பிடுறா.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..