கொஞ்ச நேரம் பேசிட்டு சுந்தரமும் சக்தியும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

சக்தி நிவேதா கிட்ட போய் "நிவி இந்திரா மேடமை பார்த்துட்டேன்.."னு சொல்லி குதிக்கிறா.

நிவேதா.. "சக்தி அதுக்கு ஏன் இப்டி குதிக்கிற.."னு கேட்கிறா.

"எனக்கு சொல்லத் தெரியலை நிவி.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.."னு சக்தி சொல்றா.

சக்திக்கு மதி போன் பண்றா.

"சக்தி கொஞ்சம் கோவிலுக்கு போகணும் வர்றீயா.."

"என்ன மேடம்.. திடீர்னு கோவிலுக்கு கூப்பிடுறீங்க.."

"அது.. அது.."

"சொல்லு.. சொல்லு.."

"விக்கி.. வந்துருக்கான்.. அவனை பார்க்கணும்.. அதான்.."

"அதான பார்த்தேன்.. என்னைக்கும் இல்லாத அதிசயமா இருக்குதுன்னு.."

"ப்ளீஸ் சக்தி.. வீட்டில விடமாட்டாங்க.. நீ வா.. ப்ளீஸ்.."

"சரி.. சரி.. வர்றேன்.."னு சொல்லிட்டு சக்தி கோவிலுக்கு கிளம்புறா.

"என்னடி இப்பதான் வந்த.. உடனே எங்க கிளம்புற.."னு சக்தி கிட்ட கீதா கேட்கிறாங்க.

"மதி கோவிலுக்கு கூப்பிடுறா.. போய்ட்டு வர்றேன்.."னு சக்தி சொல்லிட்டு கிளம்புறா.

மதியும் விக்னேஷ் (எ) விக்கியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.

வீட்டுக்கு தெரியாம சந்திக்க மதி சக்தியை பார்க்க போறதா சொல்லுவா சில நேரங்கள்ல. சில நேரம் சக்தி கிட்ட உதவி கேட்பா.

சக்தியும் ப்ரெண்ட்டுக்கு உதவி பண்றதா நினைச்சிட்டு பண்ணுவா.

சக்தி மதி வீட்டுக்கு போறா. மதியோட அம்மா இருக்காங்க..

"மதி எங்க மா.."

"இதோ கூப்பிடுறேன்.. உட்காரு சக்தி.."னு மதியோட அம்மா சொல்றாங்க.

மதியோட அம்மா கிட்ட சொல்லிட்டு இரண்டு பேரும் கோவிலுக்கு போறாங்க.

மதியும் விக்கியும் தனியா பேசட்டும்னு சக்தி தனியா வந்து உட்கார்ந்திருக்கா.

அப்ப அங்க.. "அம்மு.. ஓடாத நில்லு.."னு ஒரு குட்டிப் பையன்.. ஒரு குட்டிப் பொண்ண துரத்திட்டு வர்றான்.

இரண்டு பேரும் விளையாடுறத சக்தி வேடிக்கை பார்த்துட்டு இருக்கா.

அந்த குட்டிப் பொண்ணு கீழ விழுந்துடுறா.

வேடிக்கை பார்த்துட்டு இருந்த சக்தி அந்தப் பொண்ண தூக்கி விடுறதுக்காக பதறி எழுந்திருக்கிறா.

அதுக்கு முன்னாடி அர்ஜீன் அந்தப் பொண்ண தூக்கி விடுறான்.

"உங்க பேர் என்ன.."னு அர்ஜீன் கேட்கிறான்.

"அம்மு.."னு அந்தப் பொண்ணு சொல்றா.

"அம்முவா.."னு முகத்தில ஒரு சந்தோஷத்தோட அர்ஜீன் கேட்கிறான்.

அர்ஜீன் அம்முகிட்ட பேசுறத பார்த்த போது சக்திக்கு "நம்மகிட்ட சம்பந்தமே இல்லாம சண்டை போடுறவனா.. இப்டி குழந்தை மாதிரி பேசிட்டு இருக்கான்.."னு தோணுது.

அப்ப மதி வந்துடுறா.. "சக்தி வா போகலாம்.."னு சொல்றா.

சக்தி அங்க இருந்து நகர மனசில்லாம கிளம்புறா.

#சக்தி ரொம்ப நாளா சந்திக்க ஆசைப்பட்ட.. இந்திரா மேடமையும் பார்த்துட்டா.. சந்திக்கவே கூடாதுனு நினைச்ச அர்ஜீனோட இன்னொரு முகத்தை பார்க்கிறா..

எந்த சந்திப்பு சக்தியோட வாழ்க்கையை மாத்த போகுது..

அடியே.. அழகே..Where stories live. Discover now