இலைக்கு மழைத்துளி பாரமாகுமா?
பறவைக்கு வான் சுமையாகுமா?
எனக்கு உன் நினைவுகள் வலியாகுமா?
ஆம், ஒரு நாள்,
மண்ணில் வீழும் மழை
சிறகை மடக்கிக்கொள்ளும் பறவை
உன்னை மறக்கும் நான்
எல்லாம் சாத்தியமாகும்-GuardianoftheMoon
--------------------------------------------------------------அன்றைய வாரம் திங்கட்கிழமை ஆபீஸ் திரும்பினேன். கையில் சூடான காபி கப் உடன் லிப்ட் இலிருந்து இறங்கி என் டேபிளை நோக்கி நடந்தேன். டேபிளுக்கு வந்து என் காபி கப்பை வைத்தபோது என் டேபிள் மேல் ஒரு சிறிய செடி இருந்தது. எதிர்பார்த்ததுபோல் தோளைத் தட்டினான் இனாபா(Inaba).
"That's the andalucia flower that blooms once every 6 months and is only found in the mountains of Okinawa. You are welcome by the way," இனாபா செடியைப் பற்றி கூறினான்.
"Dude, when did you return? You didn't answer my messages yesterday so I thought you wouldn't be here today."
"I was tired after the trip. That's all."
இனாபா என் ஆபீஸில் என்னோடு பணி புரிபவன். மலை ஏறுவதில் விருப்பம். அவனோடு சேர்ந்து அடிக்கடி போய்விடுவேன் நான் என் கேமராவை தூக்கிக்கொண்டு. ஆனால் சில மலைகள் ஆபத்தானவை என்பதால் அனுபவம் வாய்ந்த இனாபா மட்டும் செல்வான். ஒவ்வொரு முறை என்னை கூட அழைத்து செல்லாமல் போனதற்கு இப்படி ஒரு புதுவகை செடியை தூக்கிட்டு வந்துருவான் அன்பளிப்பாய். அவன் கொண்டு வந்த பாதி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் கருணையின்றி கொன்றுவிட்டேன் என்றபோதும் என் பேச்சை மீறி அவன் இச்செடிகளைக் கொண்டு வருவதுண்டு. இந்த Andalucia எத்தனை நாட்கள் என் பால்கனியில் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. வெள்ளையாய் சிறு மலர்களோடு தனக்கு வரப்போகும் ஆபத்தை அறியாமல் சிரித்துக்கொண்டிருந்தது. பிறகு இருவரும் லஞ்ச்கு சந்தித்துக்கொள்ளலாம் என வேலைகளில் மூழ்கினான்.இனாபாவிடம் புதிதாய் அறிமுகமான இலங்கைப் பெண்ணைப் பற்றி விவரித்தேன்.இனாபா தான் பிறகு கூறினான், நான் பார்த்த பெண்ணின் ஆங்கிலம் வேறு மாதிரி இருந்ததால் வெளிநாட்டில் வளர்ந்தவளாகக்கூட இருக்கலாம் என. ஊர் பெண் என்று நான் குதூகலத்துடன் நினைத்ததை சொன்னதும் அவன் கிண்டலுக்கு அளவில்லை.
YOU ARE READING
அழகியல்
Romance" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தா...